8,803 Views
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தனது துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட தாக விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் பிரபாகரனின் மனைவி, மகள் ஆகியோர் இராணுவ ஷெல் வீச்சில் உயிரிழந்ததாகவும் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள கருத்துகளில் இருந்தான சாராம்சம்;
"இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் இந்தியா இலங்கைக்கு உதவியதாகவும் , நான் ஒரு போதும் எல்.டீ.டீ. ஈ இயக்கத்தை காட்டிக்கொடுக்கவில்லை. விடுதலைப் புலிகள் இறுதிப் போரில் மேற்கொண்ட போர் வியூகத்தில் ஏற்பட்ட பிழைதான் அவர்களது தோல்விக்கு காரணம். அவர்கள் ஒரே இடத்தில் போராளிகளை ஒன்றாகக் குவிக்காமல் , கெரில்லா போர் முறையை முன்னெடுத்திருந்தால் போரில் வெற்றி அடைந்திருப்பதுடன் மக்களையும் காப்பாற்றியிருக்கமுடியும். இளைய மகன் பாலச்சந்திரனுடன் பிரபாகரன் இடம்பெயரும் போது பாலச்சந்திரன் கைதுசெய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து பிரபாகரன் கைத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இலங்கை இராணுவத்திடம் உயிரோடு பிடிபடுவதை பிரபாகரன் விரும்பமாட்டார். அவர் தொடர்பில் எனக்கு நன்றாக தெரியும்" என்றார்.