தமிழ் திரையுலகில் சிறந்த நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர் நடிகர் விவேக். இவர் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 17ம் திகதி இறந்தார்.இவரின் மறைவு அனைத்து ரசிகர்களையும் கவலையில் ஆழ்த்தியது.
இவர் ஒரு நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் சமூக சீர்திருத்தக் கருத்துகளை நகைச்சுவை மூலம் நடித்துக் காட்டினார். இந்நிலையில் நடிகர் விவேக் இறந்து ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில் அவருக்கு நினைவஞ்சலி கூட்டம் சென்னையில் நடத்தப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியை நடிகர் விவேக்கிடம் மேலாளராக பணியாற்றிய செல் முருகன் மற்றும் விவேக் பசுமை கலாம் அமைப்பை சேர்ந்தவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பல அரசியல் பிரமுகர்கள் ,சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.17.04.2022 அன்று காலை YMCA. மைதானத்தில் விவேக் பசுமை கலாம் அமைப்பின் சார்பாக மரக்கன்றுகள் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.