ஆண்களுக்கான 800 மீற்றர் டென்னிஸ் ஓபன் நீச்சல் போட்டியானது கோபன்ஹேகனில் நடைப்பெற்றது.இந்தப் போட்டியில் நடிகர் மாதவனினுடைய மகன் வேதாந்த் தங்கப் பதக்கம் வென்ற செய்தியினை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் நடிகர் மாதவன் வெளியிட்டிருந்தார்.
அந்தவகையில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் பேசுகையில், "தன்னுடைய அப்பாவின் நிழலில் தான் வாழ விரும்பவில்லை எனவும் , தனக்கென ஒரு தனியான பெயரை உருவாக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் அவர் மாதவனின் மகனாக இருக்க விரும்பவில்லை எனவும் தன்னுடைய பெற்றோர்கள் அவரை எப்போதும் நன்றாக கவனித்து வருவதாகவும், தன்னுடைய இலக்கிற்காக டுபாய்க்கு மாறியது தனது பெற்றோர் செய்த முக்கிய தியாகம் எனவும் கூறியுள்ளார்.இந்நிலையில் தான் நடிகர் மாதவனின் இந்த தியாகத்தை ரசிகர்கள் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.