நம்முடைய முகம், கை, கால் முழுவதுமே சீக்கிரமே வெள்ளையாக மாற வேண்டுமெனில் இன்றைய அழகுக்குறிப்பு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நமது வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்தே இதனை சுலபமாக தயார் செய்துவிடலாம். நல்ல பலனை கொடுக்கும். முதலில் இரண்டு தேக்கரண்டி பச்சரிசியை எடுத்துக்கொண்டு அதனை இரண்டு தடவை நன்கு கழுவி தண்ணீர் ஊற்றி நான்கு முதல் ஐந்து மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்.
அவ்வாறு அரிசியை ஊற வைத்த தண்ணீருடன் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து வடிகட்டி வரக்கூடிய பச்சரிசி தண்ணீரை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். வடிகட்டிய பச்சரிசி திப்பி இருக்கும் அல்லவா அதனை மீண்டும் ஒரு முறை மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்த சாறு எடுக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போது பச்சரிசியை அரைத்து எடுத்து வெள்ளையான பச்சரிசி தண்ணீர் நமக்கு கிடைத்திருக்கும்.
அதனை அப்படியே ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வையுங்கள். சூட்டில் அது கலக்க கலக்க கட்டியாக மாறி மாறும். தண்ணியாக இருப்பது கட்டியானவுடன் அடுப்பை அணைக்கலாம். இந்த கலவையை நன்கு ஆற விடுங்கள். கொஞ்சம் கட்டியாக தான் இருக்கும்.
மேலும் இந்த வெள்ளை பச்சரிசி மாவுடன் கொஞ்சமாக தயிரும் கொஞ்சமாக காய்ச்சாத பாலையும் ஊற்றி நன்கு கலக்க வேண்டும். பின்னர் அதனை குளிர்சாதன பெட்டியில் வைத்து இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பயன்படுத்தலாம்.
அதனை முகத்திற்கு பூசி பத்து நிமிடங்கள் வரை அப்படியே விட்டு மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் சுத்தமான தண்ணீரால் கழுவ வேண்டும். எனவே மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி பச்சரிசியை பயன்படுத்தி நம் சருமத்தை பளிங்கு போல் ஜொலிக்க செய்வோம்.