தமிழ்த் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால்.தமிழில் வெளிவந்த நான் மகான் அல்ல திரைப்படத்திற்கு பின்னர் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
பின்னர் தொழில் அதிபர் கௌதம் கிச்சலுவை கடந்த வருடம் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்தது.இந்த நிலையில், அன்னையர் தினத்திற்காக நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய மகனுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து அதில் சில விஷயங்களை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
அந்தவகையில்,"வரும் காலங்களில் நிறைய விஷயங்களில் ஒரு தாயாக உனக்கு நான் கற்றுத்தரவுள்ளேன். ஆனால் நீ எனக்கு ஏற்கனவே நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்து விட்டாய். குறிப்பாக தாயாக இருப்பது என்ன என்பதை நீ எனக்கு கற்றுத்தந்துள்ளாய். என் இதயத்தின் ஒரு பகுதி என் உடலுக்கு வெளியே இருக்கிறது என்பதை உணரச்செய்துள்ளாய். என் சிறிய இளவரசனே, நீ என் சூரியன், என் சந்திரன், என் நட்சத்திரங்கள் அனைத்தும் நீங்கள்தான்" என பதிவிட்டுள்ளார்.