நடிகர் விஷால் தனது ' Vishal Film Factory ' தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களைத் தயாரித்திருந்தார்.
இதற்காக, நடிகர் விஷால் அன்புச்செழியன் என்பவரிடமிருந்து இந்திய மதிப்பில் 21 கோடியே 29 இலட்சம் ரூபாவினை கடனாகப் பெற்றிருந்தார். ஆனால், அந்த கடன் தொகையினை இன்னுமொரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் பொறுப்பேற்றிருந்தது.
அதேசமயம், கடன் தொகை முழுவதையும் விஷால் திருப்பிச் செலுத்தும் வரை, அவர் தனது திரைப்பட நிறுவனத்தின் அனைத்து திரைப்படங்களின் உரிமைகளையும் பணம் செலுத்திய திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் எனவும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஒப்பந்தத்தை மீறி நடிகர் விஷால் திரைப்படங்களை வெளியிட்டதாகக் கூறி, பணத்தை திருப்பிச் செலுத்த உத்தரவிடக்கோரி நடிகர் விஷாலுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் கடனைப் பொறுப்பேற்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அந்தத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு 30% வட்டியுடன் கடன்தொகையினை செலுத்த வேண்டும் என நடிகர் விஷாலுக்கு உத்தரவிட்டுள்ளார்.