அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘தாய் கிழவி’ சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் வயதான பாட்டியின் தோற்றத்தில் ராதிகா நடித்துள்ளார்.
இத்திரைப்படத்தை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்ற nilaiyil தற்போது ‘தாய் கிழவி’ குறித்து ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “பெண்மையின் சாரத்தையும் வலிமையையும் இவ்வளவு அழகாக வெளிப்படுத்தியிருப்பதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படம் கண்டிப்பாக அனைவரது மனதையும் தொடும். ரொம்ப நன்றாக இருக்கிறது. நமது சமூகத்துக்கு நீங்கள் ஒரு முக்கியமான செய்தியைச் சொல்லியிருக்கிறீர்கள்.இவ்வளவு கண்ணியமான நகைச்சுவை மற்றும் எளிமையுடன். உங்கள் கதையைப் பார்த்து ஒரு பெண்ணாக மிகவும் பெருமைப்படுகிறேன்" என பதிவிட்டுள்ளார்.