சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய ஒருநாள் அணியில் ஹர்திக் பாண்டியாவை அவசர கதியில் களமிறக்க விரும்பவில்லை என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் முழுநேர சகலதுறை வீரராக பங்களிக்கும் வகையில் முழு உடற்தகுதி பெற்ற பிறகே அணியில் இடம்பெறுவார் என்றும் அவர் தெரிவித்தார்.50 ஓவர் போட்டிகளில் ஒரு பந்துவீச்சாளருக்கான முழு ஒதுக்கீடான 10 ஓவர்களை வீச ஹர்திக் பாண்டியா இன்னும் தயாராகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.