பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில், விபத்துக்குள்ளாகி தற்போது ஓய்வில் இருக்கும் நடிகர் சசிகுமார், சம நேரத்திலேயே தனது அடுத்த படத்துக்கான கதையைக் கேட்டு ஒப்பந்தமாகியுள்ளார்.
ஜில்லா படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய நேசமணி என்பவர் இயக்குனராக மாறி இயக்கும் இப்படத்தில், குக்கூ பட நாயகி மாளவிகா நாயார் நாயகியாகிறார்.
விரைவில் தாரை தப்பட்டையை முடித்துக் கொடுத்துவிட்டு, இந்த பெயரிடப்படாத புதிய படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார் சசிகுமார்.
-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-