இயற்கையான முறையில் உங்கள் அழகை அதிகரித்துக் கொள்ள சிறந்த வழிமுறைகள் உள்ளன. அவற்றை சீராக பேணுவதன் மூலம் சருமத்தை சிறப்பாக பாதுக்காக்க முடிவதும் எமது அழகையும் மேம்படுத்திக் கொள்ள முடியும். அவ்வாறான அற்புதமான குறிப்புக்களின் தொகுப்பு இன்றைய பதிவில் தரப்பட்டுள்ளன.
வெள்ளரிக்காயில் இயற்கையாகவே ப்ளீச்சிங் தன்மை அதிகமாக உள்ளது. வெள்ளரிக்காயுடன் சிறிதளவு பால் சேர்த்துஇ சாறாக அரைத்து எடுத்து தினமும் இரவு தூங்குவதற்கு முன் முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்த பிறகு குளிர்ந்த நீரில் சருமத்தை கழுவி வந்தால் சருமம் சிவப்பாக காணப்படும்.
அத்துடன் அதிகமானவர்கள் விரும்பி உண்ணும் உருளைக்கிழங்கிலும் அதிக அளவில் பிளிச்சிங் தன்மை இருப்பதால் சருமத்தில் உள்ள கருமையை அகற்ற உதவியாக இருக்கின்றது. இதை சாறு பிழிந்து அரைத்து எடுத்து இரவு தூங்குவதற்கு முன்பு தினமும் சருமத்தில் பூசி சில நிமிடம் கழித்து சருமத்தை கழுவி வந்தால் சருமம் பளபளப்பாக இருக்கும்.
அரை ஸ்பூன் அளவு தேனுடன் ஒரு சிட்டிகை பட்டை பொடியை நன்கு கலந்து தினமும் சருமத்தில் பூசி அரை மணிநேரம் கழிந்ததும் சருமத்தை குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் சருமம் மென்மையாக காணப்படும்.
தயிருடன் சிறிதளவு கடலை மாவு கலந்து சருமத்தில் தினமும் தடவி நன்கு மசாஜ் செய்து பிறகு 10 நிமிடம் கழித்து சருமத்தை கழுவி வந்தால் சருமம் பொலிவுடன் காணப்படும்.
இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டருடன் இரண்டு ஸ்பூன் காய்ச்சாத பசும்பாலைச் சேர்த்து நன்கு கலந்து தினமும் சருமத்தில் பூசி 10 நிமிடம் கழித்து தண்ணீரில் கழுவி வந்தால் சரும செல்கள் புத்துணர்ச்சி அடைவதோடு சருமம் அழகாக மென்மையாகவும் இருக்கும்.
இவ்வகைக் குறிப்புக்களை அன்றாடம் நாம் முறையாக செய்து வந்தால் எமது அழகு மேலும் அற்புதமான அழகைப் பெறும்.