கரட்டை உணவுடன் அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் கண்கள் ஆரோக்கியம் அடையும், மேலும் மாலைக் கண் நோய் வராமல் தடுக்கும் சக்தி கொண்டது.அந்தவகையில் கரட்டினை வைத்து இலகுவாக செய்யக்கூடிய கரட் சாதம் பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கரட் - 1 கப் துருவியது
பாஸ்மதி அரிசி - 200 கிராம் (வேகவைத்தது)
வெங்காயம் - 2 நறுக்கியது
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மசாலா தூள் - 3/4 தேக்கரண்டி
சாம்பார் தூள் - 1 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
நெய் - 1 மேசைக்கரண்டி
முந்திரி பருப்பு
கொத்தமல்லி இலை
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 2
கறிவேப்பிலை
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து உருகியதும், கடுகு, சீரகம், சிவப்பு மிளகாய், முந்திரி பருப்பு சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள்.பின்னர் கடுகு வெடிக்க ஆரம்பித்தவுடன், வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள் .
அதன் பின்னர் வெங்காயம் பின்னிறமாக மாறியதும் , முதலில் துருவிய கரட்டைச் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின்னர் உப்பு, மஞ்சள் தூள், மசாலா தூள், சாம்பார் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கிளார்க் கொள்ளவும் .
அதன் பின்னர் கரட் வெந்ததும், வேகவைத்த பாஸ்மதி அரிசியை கலந்துக்க கொள்ளுங்கள். இறுதியாக கொத்தமல்லி இலையை மேலே தூவி கரட் சாதத்தை சூடாக பரிமாறுங்கள்.