மிகவும் சுவையாக இலகுவாக செய்யக்கூடிய ரவை கேசரி எவ்வாறு செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
நெய் - தேவையான அளவு
முந்திரி பருப்பு - தேவையான அளவு
காய்ந்த திராட்சை - 1 மேசைக்கரண்டி
ரவை - 1 கப்
சீனி - 2 கப்
தண்ணீர் - 3 கப்
ஓரஞ்சு Food Color - 1/4 தேக்கரண்டி
குங்குமப்பூ
எண்ணெய் - தேவையான அளவு
ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் சூடான ஒரு பாத்திரத்தில் நெய்யினை ஊற்றி முந்திரி மற்றும் திராட்சையை பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் அதே பாத்திரத்தில் , நெய் மற்றும் ரவாவை சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடம் வரை வறுத்துக் கொள்ளுங்கள்.
பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க வீட்டுக் கொள்ளுங்கள். பிறகு ஓரஞ்சு Food Color சேர்த்துக் கொள்ளவும்.
அதனையடுத்து கொதிக்கும் தண்ணீரில் வறுத்த ரவையை சேர்த்து, குறைந்த தீயில் கலந்து கொள்ளுங்கள்.
பின்னர் குங்குமப்பூ, நெய், எண்ணெய் இவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.ரவை நன்றாக வெந்ததும் சீனியை சேர்த்துக் கொள்ளவும். சர்க்கரை முழுவதுமாக கரைந்து கலவை கெட்டியாகும் வரை கலந்து கொதிக்க வீட்டுக் கொள்ளுங்கள்.
அடுத்து ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து கலந்து விடுங்கள்.இறுதியாக நெய் சேர்த்து கலந்து விடவும்.
அடுப்பை அணைத்துவிட்டு ரவா கேசரியை 5 நிமிடம் அடுப்பில் அப்படியே வையுங்கள்.
இப்போது சுவையான ரவை கேசரி தயார்