பிரபல நடிகர் சிரஞ்சீவி ஆச்சார்யா திரைப்படத்தினை தொடர்ந்து தற்போது காட்பாதர் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தினை இயக்குனர் மோகன் ராஜா இயக்கி வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் வேகமாக இடம்பெற்று வருகின்றது.இந்த நிலையில் இந்தத் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு சிரஞ்சீவி மற்றும் சல்மான்கான் இணைந்து நடனமாட உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. இந்த பாடலுக்கு நடன இயக்குனராக பிரபுதேவா பணிபுரிவார் என இசையமைப்பாளர் தமன் அறிவித்துள்ளார். அதனால் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.