2003-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலிய அணி சம்பியன் பட்டம் வென்றது.
இதில் கங்குலி தலைமையில் விளையாடிய இந்திய அணி இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியாவிடம் 125 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
முன்னதாக இந்த உலகக் கிண்ணத் தொடருக்கான இந்திய அணியில் அந்தக் கால கட்டத்தில் சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான வி.வி.எஸ். லட்சுமணனை கங்குலி தேர்ந்தெடுக்காதது பல விமர்சனங்களை ஏற்படுத்தியது.
அவருக்குப் பதிலாக தினேஷ் மோங்கியா தேர்வு செய்யப்பட்டார். மேலும், அந்தத் தொடரில் லட்சுமணனை தேர்வு செய்யாததால் அவர் தன்னிடம் 3 மாதங்கள் பேசவில்லை என்ற தகவலை கங்குலி அண்மைய பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.
பின்னர் நான் அவருடன் சமரசம் செய்தேன். லட்சுமணன் போன்ற திறமையான வீரர் உலகக் கிண்ணத் தொடரில் இடம்பெறாமல் போனதற்கு வருத்தப்படுவது மிகவும் இயல்பானது என்றும் தெரிவித்துள்ளார்.