சாதாரண சந்தேகங்களுக்கு பதில் அளிப்பது தொடங்கி, கோடிங் எழுதி தருவது, படங்களை உருவாக்குவது வரை பல்வேறு செயல்பாடுகளுக்கு, Open AI நிறுவனத்தின் ChatGPT ஐ மக்கள் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில், நிகழ்வு ஒன்றில் பேசிய ChatGPT நிறுவனர்களில் ஒருவரான சேம் அல்ட்மன், ChatGPT ஐ அதிகளவு நம்ப வேண்டாம் என கூறியிருப்பது பயனர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்வில் பேசிய அவர், "ChatGPT ஐ மக்கள் அளவுக்கு அதிகமாக நம்புகிறார்கள். அது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. ஆனால், ChatGPT ஐ அதிகளவில் நம்ப வேண்டாம்.
ஏனென்றால் செயற்கை நுண்ணறிவும் தவறுகளை செய்யும். தவறான தகவல்களையும், கணிப்புகளையும் உருவாக்க கூடும்.
எங்களது தயாரிப்பு தொடர்பாக நேர்மையான சில விடயங்களைச் சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். தற்போதைய தொழில்நுட்பத்தின் உண்மைத்தன்மை மிகச் சிறப்பானதாக இல்லை" என தெரிவித்துள்ளார்.