Online வாயிலாக போலி செயலிகள் மூலமாக பணத்தை பறிக்கும் செயற்பாடுகள் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் கும்பல் Trading செயலிகள் போலவே Identical ஆக போலி செயலியை உருவாக்கி, பணத்தை அதற்கு Transfer செய்யுமாறு கோருகிறார்கள்.
அதனை நம்பி Trade செய்யலாம் என்று 20,000 ரூபாயை (உதாரணமாக) நாம் பணப்பரிமாற்றம் செய்த பின், நமக்கு 21,500 கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
ஆனால், உண்மையில் Trading எதுவும் நடக்காது.
ஒரு பகுதி பணத்தை நாம் அதிலிருந்து எடுக்கலாம் என்று நினைத்தால் எடுக்க முடியாது. அப்போதுதான் அது ஒரு போலி செயலி என்பதையே நாம் அறிவோம்.
நாம் குறிப்பிட்ட அளவு பணத்தை செலுத்திய பின்னர் அதனை திரும்ப எடுக்கலாம் என்றால், தாமதமாக பணம் செலுத்தப்பட்டதால் அபராதம் கட்டிய பின்னர்தான் உங்கள் பணத்தை எடுக்க முடியும் என்றும் செயலியில் காட்டப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதுபோன்ற மோசடியில் பொலிஸ் அதிகாரிகள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள் கூட ஏமாந்திருப்பதாக கூறப்படுகிறது.
எனவே இந்த Apps தொடர்பாக அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.