உலகின் உயரமான மலை என்று அனைவராலும் அறியப்படும் எவரெஸ்ட் மலையில் உள்ள பனிப்பாறைகள் உருகுவதற்கு மனித சிறுநீரும் ஒரு காரணம் என நேபாளம் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையானது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மலையேறும் வீரர்களும் வழிகாட்டிகளும் எவரெஸ்ட் மலையின் அடிவாரத்தில் முகாமிட்டுத் தங்கும் வேளைகளில் கிட்டத்தட்ட 6,000 லீட்டர் சிறுநீரைக் கழிப்பதாகவும், இதனால் 154 டன் பனிப்பாறைகள் உருகுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
எவரெஸ்ட் பனிப்பாறைகள் உருக மனித சிறுநீரும் ஒரு காரணம் எனும் தகவல் சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.