பேஸ்புக் கணக்குகளையுடைய பலருடைய தனிப்பட்ட விபரங்கள் திருடப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவலொன்று தற்போழுது வெளியிடப்பட்டுள்ளது.
குறைந்தது 81 ஆயிரம் ஃபேஸ்புக் கணக்குகளில் இருந்து பயனாளிகளின் தனிப்பட்ட செய்திகளை, ஹேக்கர்கள் திருடி வெளியிட்டதாக தெரிய வந்துள்ளது.
மொத்தம் 120 மில்லியன் ஃபேஸ்புக் கணக்குகளின் தனிச் செய்திகளை விற்பனை செய்ய முயற்சித்ததாக அதனை செய்தவர்கள் பிபிசி ரஷ்ய சேவையிடம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், தகவல்களை பாதுகாப்பதில் எந்த சமரசமும் செய்யப்படாது என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
அத்துடன், தீங்கிழைக்கும் ப்ரௌசர் இணைப்புகளால் தகவல்கள் பெறப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும், இது தொடர்பில் ஃபேஸ்புக் நிறுவனம் எந்தவிர மேலதிக தகவல்களையும் வெளியிடவில்லை.