லண்டனில் மூன்று இடங்களில் வெடிகுண்டு கண்டுபிடிக்கபட்டதால், அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்படுகின்றது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் அமைந்துள்ள விமான நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட 3 வெவ்வேறு இடங்களில் சிறிய ரக வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2வதாக ரயில் நிலையத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டு, உடனடியாக செயலிழக்க வைக்கப்பட்டது.
அடுத்ததாக 3-வது வெடிகுண்டு பொதி, லண்டன் நகர விமான நிலையத்தில் உள்ள சிட்டி ஏவியேஷன் கட்டிடத்தில் கண்டறியப்பட்டது. இதனிடையே, 3 வெடிகுண்டுப் பொதிகள் கண்டறியப்பட்ட போதிலும், அதில் 1 வெடிகுண்டு பொதிமட்டுமே திறக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. இதன்போது யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
குறித்த வெடிபொருள் சிறிய ரகம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள். திடீரென கண்டறியப்பட்ட வெடிகுண்டு அச்சத்தினால் உள்ளூர் விமான போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு தற்போது வழமைக்கு திரும்பி உள்ளது.
இருப்பினும், ரயில், பேருந்து, விமான நிலையங்களில் கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இருப்பினும் அனைவரையும் விழிப்புணர்வுடன் இருக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.