கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 4 வருட திருமண வாழ்க்கையினை நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யாவும் முடிவுக்கு கொண்டு வந்தனர்.கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இருவரும் விவாகரத்து செய்து கொண்டதாக அறிவித்தனர்.
இந்த நிலையில், சமந்தாவும், நாக சைதன்யாவும் மீண்டும் ஒன்று சேர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அவர்கள் திருமண வாழ்க்கையில் ஒன்று சேரவில்லை. பிரபல பெண் இயக்குனரான நந்தினி ரெட்டி, தான் இயக்க போகும் புதிய படத்தில் நாக சைதன்யா- சமந்தா ஜோடியை ஒன்று சேர்க்க முயற்சி செய்து வருகிறாராம்.
2019 ம் ஆண்டு ஓ பேபி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இவர்களிடம் மற்றொரு படத்தில் சேர்ந்து நடிக்க கதை கூறி இருந்தாராம். இதனால் தான் இந்த ஜோடியை மீண்டும் திரையில் ஒன்று சேர்க்க வேண்டும் என முடிவு செய்துள்ளாராம். இந்த படம் பற்றிய முக்கிய தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளதாக கூறப்படுகின்றது.