நம்முடைய முடியை அடர்த்தியாக கையில் பிடிக்கவே முடியாத அளவிற்கு முடி வளர்ந்தால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும். முடியானது திக்காகவும் அதேசமயம் நெருக்கமாகவும் தலைமுழுவதும் கருகருவென வளர வேண்டுமானால் ஆளி விதை ஒன்றே போதும்.
குறிப்பாக இந்த வெயில் காலத்திற்கு இது நன்கு பொருந்தும். முடியில் வறட்சி தன்மை அதிகம் இருந்தால் அவ்வறட்சியை ஒரே நாளில் கட்டுப்படுத்தி முடியை சிக்கு இல்லாமல் சில்கியாக மாற்ற கூடிய சக்தியும் இதற்கு உண்டு.
அத்தகைய நன்மைகளை தரும் இந்த அழகுக்குறிப்பை இப்போது பார்ப்போம். இதனை தயாரிக்க தேவையானவை செம்பருத்தி ப, ஆளி விதை ஆகியனவாகும். பொதுவாக ஆளி விதை கடைகளில் கிடைக்கும் ஓர் பொருளாகும்.
ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரு குவளை அளவு தண்ணீரை ஊற்றி அதில் பத்து முதல் பதினைந்து வரையான செம்பருத்திப்பூவை சேர்த்துக்கொள்ளுங்கள். இரண்டு தேக்கரண்டி ஆளிவிதை சேர்த்து அடுப்பில் கொதிக்க வைக்க வேண்டும்.
ஏழு முதல் பத்து நிமிடங்களிற்குள் தண்ணீர் நன்கு கொதித்து கொழகொழவென நமக்கு கிடைக்கும். பின்னர் அதனை வடிகட்டியில் வடிகட்ட வேண்டும். அது சற்று சிரமமானது ஏனெனில் ஜெல் போல சற்று கொழகொழவென இருக்கும்.
பின்னர் அது ஆறியதும் ஒரு முடடையின் உள்ளே இருக்கும் வெள்ளைக்கருவை மட்டும் எடுத்து இதோடு ஊற்றி நன்கு கலந்து அதன்பின் இந்த கலவையை நம் தலையில் பூச வேண்டும்.
இவ்வாறு வாரத்தில் மூன்று முறையேனும் செய்து வர முடி உதிர்வு உடன் கட்டுப்படுத்தப்படும். முடி நன்கு நீண்டு வளரும். எனவே மேற்சொன்ன வழிமுறையினை பின்பற்றி வந்தால் முடியானது நன்கு நீண்டு ஆலமர விழுது போல வளரும்.