கோடைகாலம் வந்துவிட்டது. தகிக்கும் வெயிலுக்கும் சரும எரிச்சலுக்கும் இளநீரை மிஞ்சியது எதுவுமே இல்லை . தற்போது இவை ஊருக்கு ஊர் , வீதிக்கு குவிக்க பட்டு விற்பனையாகி வருகிறது.
மேலும் அதிக வெப்பம் காரணமாக அனைவரும் குளிரூட்டிகளையும், குளிர்சாதன பெட்டிகளையும் பயன்படுத்தி வருகின்றனர். இன்னும் ஒரு சில மாதங்களுக்கு நீடிக்கும் கோடைகால வெப்பத்திலிருந்து நம்மை பாதுகாக்க அதிகளவு தண்ணீர் பருக வேண்டும்.
ஆதலால் இன்றைய அழகுக்குறிப்பு கோடைகால சரும பாதுகாப்பு முறைகள் பற்றி அமைகிறது. வெயில் காலம் ஆரம்பித்து விடடாலே வியர்க்குரு மட்டுமில்லாமல் வேறும் சில சரும பாதிப்புகளும் நம்மை ஆட்கொள்ள தொடங்கி விடும்.
கூடுமானவரை வெயில் காலங்களில் இறுக்கமான உடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும். சற்று தளர்ந்த ஆடைகளை அணிவது பொருத்தமானதாகும். இல்லையேல் உஷ்ணத்தை சமாளிப்பது கஷ்டமானதாகும்.
குறிப்பாக பூஞ்சை தொற்று ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புக்கள் இருப்பதால் கூடுமானவரை ஐம்பது கிலோ எடைக்கு மேல் உள்ளவர்கள் தினமும் மூன்று லீட்டர் தண்ணீர் பருக வேண்டும். உங்கள் எடைக்கு தகுந்தாற்போல் நீங்கள் தண்ணீரை அதிகம் பருகினால் தான் உடல் உஷ்ணத்தை அனுசரித்துக்கொள்ளலாம் .
மேலும் வறண்ட சருமம் கொண்டவர்கள் மற்றும் வெயிலினால் கருப்பு நிற தேகம் கொண்டவர்கள். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக இந்த பேக் போட்டு பின்னர் குளிக்க செல்வது தான் சரியானதாகும்.
அதேபோல இளநீரில் இருக்கும் சத்துக்கள் நீர்க்கடுப்பு, சிறுநீரக தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்கும் என்பதால் தினமும் ஒரு இளநீர் அருந்துதல் நன்மை பயக்கும். எனவே மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி இளநீர் தரும் நன்மைகளை பெற்றுக்கொள்வோம்.