தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை அனுபமா.தமிழில் கொடி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் அத்தோடு தள்ளிப்போகாதே படத்தில் அதர்வாவுடன் நடித்து இருந்தார்.
அனுபமா பரமேஸ்வரனை தெலுங்கானா மாநிலம் சூர்யா பேட்டையில் ஒரு கடை திறப்பு விழாவுக்கு அழைத்திருந்தனர்.
அங்கு அவரை காண ரசிகர் பட்டாளமே குவிந்தது.
அந்த நிகழ்ச்சி முடிந்து காருக்கு திரும்புகின்ற போது அவரை ரசிகர்கள் சூழ்ந்தனர். அப்போது அனுபமா சில ரசிகர்களிடம் கை குலுக்கி செல்பி எடுத்துக்கொண்டார். அதுவே இறுதியில் அவருக்கு வினையாக மாறியது.
செல்பி எடுக்க முடியாத சிலர் கோபத்தில் அனுபமா காரின் டயரில் காற்றை பிடுங்கி விட்டனர். ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய அனுபமா தவித்தார். உடனே கடை ஊழியர்களும், போலீசாரும் ரசிகர்களை விரட்டி அனுபமாவை மீட்டு வேறு ஒரு காரில் ஏற்றி ஐதராபாத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.