நம் அழகை மெருகூட்டுவதில் முடிக்கு முக்கிய பங்கு உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. அதனால் தான் நாம் ஒவ்வொருவரும் நம் முடியலங்காரத்தில் அதிக சிரத்தை எடுத்துவருகின்றோம்.
அந்தவகையில் ஒவ்வொரு முடியும் அறுபடாமல் வளரவேண்டும் என்றால் நாம் எந்த எந்த வகையான ஹேர் பேக் பயன்படுத்தலாம் என்பது பற்றிய ஓர் குறிப்பை இன்றைய அழகு குறிப்பு பகுதியில் பார்ப்போம்.
முடி விழுந்த இடத்தில் மீண்டும் முடி வளரவேண்டும். மீண்டும் அந்த முடி உதிராமல் வளர வேண்டும். அப்போது தான் தலைமுடி பார்ப்பதற்கு அழகாகவும், அடர்த்தியாகவும் இருக்கும் என்பதெல்லாம் நமக்கு இருக்கின்ற ஆசைகள் ஆகும்.
இயற்கையாக கிடைக்கும் இரண்டு கீரை வகைகளை வைத்து இந்த ஹேர் பேக்கினை நாம் தயார் செய்ய போகின்றோம். நம்மில் எதனை பேருக்கு தெரியும் கரிசலாங்கண்ணி இலை முடிவளர்ச்சியை அதிகரிக்க செய்யும் ஓர் கீரை வகை என்பது. ஆம் உண்மைதான். க ருவேப்பிலை பற்றி சொல்லவே தேவையில்லை.
முடி கரு கருவென வளர்வதற்கு கருவேப்பிலை மிகவும் முக்கியமானது. கரிசலாங்கண்ணி ஒரு கைப்பிடி அளவு , கருவேப்பிலை ஒரு கைப்பிடி அளவு ஆகியவற்றை எடுத்து தண்ணீரில் அலசி ஒரு மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு விழுது போல அரைத்துக்கொள்ள வேண்டும்.
அவ்வாறு அரைத்த விழுதை ஒரு துணியில் சுற்றி வடி கட்டினால் கரும்பச்சை நிறத்தில் சாறு நமக்கு கிடைக்கும். பின்னர் இந்த சாறுடன் இரண்டு தேக்கரண்டி தயிர் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதோ நமக்கு தேவையான சூப்பரான ஹேர் பேக் தயார்.
இதனை தலைக்கு போட்டு மசாஜ் செய்து கொள்ள வேண்டும். அதன்பின் முடியின் நுனிப்பகுதி வரை இந்த ஹேர் பேக்கை போட்டு முடியை கொண்டை கட்டி வைத்துக்கொள்ளுங்கள்.
சில நிமிடங்களின் பின் ஷாம்பு அல்லது சீகைக்காய் போட்டு தலையை அலசி விடடால் போதும். முடி பார்ப்பதற்கு கரு கருவென அவ்வளவு அழகாக காட்சியளிக்கும். முறையினை வாரத்தில் மூன்று முறை பின்பற்றிவர சிறந்த பலன் கிடைக்கும்.