கோடைகாலம் என்றாலே சருமத்தில் வியர்க்குரு , பருக்கள், கருந்திட்டுகள் என்பன இயல்பாகவே சிலருக்கு ஏற்படுவதுண்டு. இதற்கு தக்காளி மற்றும் ஓட்ஸ் ஆகிய இரண்டும் பிரகாசமான சருமத்திற்கு உதவும் இரண்டு பொருட்களாகும்.
இந்நிலையில் இவை இரண்டையும் வைத்து ஒரு பேஸ் பேக்கினை எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றி இன்றைய அழகுக்குறிப்புகள் பகுதியில் பார்ப்போம். இதனை தயாரிக்க தேவையானவை
தக்காளி (மசித்தது )- இரண்டு தேக்கரண்டி
ஓட்ஸ்- இரண்டு தேக்கரண்டி
தயிர்- ஒரு தேக்கரண்டி
கோப்பை- ஒன்று ஆகியனவாகும்.
சரும செல்களுக்கு தேவையான கனிமச்சத்துக்கள், விற்றமின்கள் மற்றும் பல ஊடடசத்துக்கள் தக்காளியில் காணப்படுகிறது. எனவே முகத்திற்கு தக்காளியை பயன்படுத்துவதால் சரும வறட்சி உட்பட பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கிறது. அதேபோல ஓட்ஸ் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பொருட்களில் ஒன்றாக இருப்பதோடு சருமத்திற்கு அழகூட்டும் பொருளாகவும் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் வறண்ட சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க ஓட்ஸ் உதவுகிறது. அதேபோல தயிரில் உள்ள 'லாக்டிக்' அமிலம் சருமத்திலுள்ள நச்சுக்களை அகற்றவும் சரும துளைகளை சுத்தம் செய்யவும் உதவுகிறது. இதன் காரணமாக கரும்புள்ளிகள் மற்றும் கருந்திட்டுக்கள் குறைகிறது. இத்தகைய பேஸ் பேக்கினை தயாரிக்க முதலில் ஒரு கோப்பையை எடுத்து அதில் நன்கு மசித்த தக்காளி, ஓட்ஸ் மற்றும் தயிர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இது நல்ல பலனை சருமத்திற்கு தருகிறது.
இந்த பேஸ் பேக்கினை பயன்படுத்தும் முன் முகத்தை நன்கு கழுவி சுத்தம் செய்யுங்கள். பின்னர் இந்த தக்காளி, ஓட்ஸ் பேக்கினை முகத்தில் அதிக நேரம் வைப்பது எரிச்சலை உண்டாக்கும். எனவே பதினைந்து நிமிடத்திற்குள் சுத்தம் செய்துவிடுங்கள்.
வாரம் இரு தடவை இவ்வாறு செய்வது நல்ல பலனை தரும். எனவே மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி வந்தால் சருமத்தில் ஏற்படும் பருக்களை இல்லாது செய்யலாம்.