நடிகை நயன்தாரா தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘ஓ-2’ . இந்தத் திரைப்படத்தினை விக்னேஷ் விஷன் இயக்கி உள்ளார்.
இந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.அண்மையில் கொரோனாவின் தாக்கத்தினால் ஓக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்திருந்தது .இதனை அடிப்படையாக கொண்டே ‘ஓ-2’ திரைப்படம் உருவாகியுள்ளது. ஓக்சிஜன் ஒரு மனிதனுக்கு எவ்வளவு அவசியம் என்பதை அனைவரும் கொரோனா காலத்தில் உணர்ந்துக் கொண்டோம்.
இந்தத் திரைப்படம் தமிழ்நாடு, கேரளா இணையும் மலைப்பகுதியில் இக்கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் அம்மா பார்வதியாக நயன்தாரா நடித்துள்ளாராம் என்பதும் குறிப்பிடதக்கதாகும்.