Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
12
இலகுவாக ரசம் வைப்பது எப்படி ?

Sooriyan FM Gossip - இலகுவாக ரசம் வைப்பது எப்படி ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

432 Views
இலகுவாக வைக்கலாம் சுவையான ரசம் 
தேவையான பொருட்கள்:
தனியா – 2 கரண்டி,
சீரகம் – 1 கரண்டி,
மிளகு – ஒரு கரண்டி,
வரமிளகாய் – 2,
துவரம்பருப்பு – இரண்டு கரண்டி,
பெருங்காயம் – கால் கரண்டி,
பூண்டு – 6 பல்,
புளி – எலுமிச்சம்பழ அளவு,
தக்காளி – 2,
சின்ன வெங்காயம் – 1,
கருவேப்பிலை – ஒரு கைப்பிடி,
கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி,
மஞ்சள்தூள் – அரை கரண்டி,
எண்ணெய் – 2 கரண்டி,
கடுகு – அரை கரண்டி,

செய்முறை:
முதலில் எலுமிச்சை அளவு புளியை தண்ணீரில் ஊறவைத்து, அதனுடன் 200 கிராம் தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும். பிறகு 2 தக்காளியை நான்கு துண்டுகளாக அரிந்து, அவற்றை நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஆறு பல் பூண்டை சிறிய உரலில் வைத்து தட்டி வைக்க வேண்டும்.

அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, அதில் 2 கரண்டி, துவரம் பருப்பை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். பிறகு இதனுடன் 2 கரண்டி, தனியா, ஒரு கரண்டி, மிளகு, ஒன்றரை கரண்டி, சீரகம் மற்றும் ஒரு வரமிளகாய் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். பிறகு கால் கரண்டி, பெருங்காயம், 3 சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி விட்டு அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

பிறகு இவை அனைத்தையும் ஒரு மிக்ஸியில் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஒருமுறை அரைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் மறுபடியும் கடாயில் எண்ணெய் சேர்த்து, எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் ஒரு வரமிளகாய் சேர்த்து வதக்கி விட வேண்டும்.

பிறகு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து விட வேண்டும். லேசாக கொதி வரும் பக்குவத்தில் தட்டி வைத்துள்ள பூண்டு சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு இதனுடன் அரைத்து வைத்துள்ள புளிக்கரைசலையும் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

பின்னர் இவற்றுடன் உப்பு, மஞ்சள்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி அனைத்தையும் சேர்த்து லேசாக கொதி வர ஆரம்பித்ததும் அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

சுவையான ரசம் தயார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top