குப்பையிலிருந்து எடுக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி AI Bike ஒன்றை இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.
Garuda என பெயரிடப்பட்டுள்ள இந்த பைக், 50 சதவீதம் கழிவுப் பொருட்களில் இருந்து உருவாக்கப்பட்ட ஒரு புதுமையான வாகனமாகும்.
இந்தியாவின் Bhagwan Mahavir பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர்கள் 3 பேர் இணைந்து இதனை உருவாக்கியுள்ளனர்.
இந்த வாகனம் Raspberry Pi கணினி அமைப்பை மையமாகக் கொண்டு செயற்படுகிறது.
இது voice command ஏற்கும் திறன், வேகக் கட்டுப்பாடு, தானாகவே நிறுத்தும் திறன் போன்ற பல AI அம்சங்களைக் கொண்டுள்ளது.
WiFi இணைப்பு மூலம் வாகனத்துடன் தொடர்பு கொள்ளும் வசதியும் உள்ளது.
இந்த வாகனத்தில் பாதுகாப்பு அம்சங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இரண்டு சென்சார்கள் தொடர்ந்து கண்காணிக்கின்றன.
12 அடி அருகில் வாகனம் வந்தால் வேகத்தை குறைக்கும், 3 அடி அருகில் தடையை கண்டால் Stop என்ற குரல் கட்டளைக்கு உடனே நிறுத்தும் திறனும் உள்ளது.
GPS navigation, phone calling மற்றும் music playback, முன்-பின் கமெரா, டச் ஸ்க்ரீன் மற்றும் mobile wireless charging போன்ற வசதிகளும் உள்ளன.
இந்த bike, eco mode-ல் 220 கி.மீ. மற்றும் sports mode-ல் 160 கி.மீ வேகத்தில் இயங்கக் கூடியது.