அவுஸ்திரேலிய மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.
முதல் இரண்டு போட்டிகளில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில், இந்தப் போட்டியில் ஆறுதல் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தியா களம் இறங்கியது.
முதலில் களம் இறங்கிய அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 409 ஓட்டங்களை குவித்தது.
அலிசா ஹீலி 158 ஓட்டங்கள் குவித்தார். பெத் மூனி ஆட்டமிழக்காமல் 106 ஓட்டங்களை பெற்றார்.
பின்னர் 410 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய
இந்திய அணி 45.1 ஓவர்களின் 224 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியடைந்தது.
இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலிய மகளிர் அணி 3-0 என தொடரை வென்றது.