சம்பூரில் பொது மக்களுக்கு சொந்தமான 800 ஏக்கர் காணியை முதலீட்டு சபைக்கு வழங்கியமை தொடர்பாக பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தமிமீழ விடுதலைப் புலிகளுக்காக நிதி திரட்டலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு, ஐந்து இலங்கையர்களுக்கு நெதர்லாந்து நீதிமன்றம் 19 மாதங்கள் தொடக்கம் 6 வருடங்களுக்கான சிறை தண்டனை விதித்துள்ளது.
நிறைவேற்று ஜனாதிபதி முறையின் அதிகாரங்களை 60 தொடக்கம் 65 சதவீதம் வரை குறைப்பதற்கு 19 வது அரசியலமைப்பு திருத்தம் உதவியதாக அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்கவுக்கு எதிராக, நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச மற்றும் வாசுதேவ நாணயகா ஆகியோர் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிடம் இன்று முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
இலங்கை விமானப்படைக்கு மிக் 27 ரக போர் விமானங்களை கொள்வனவு செய்யும் கொடுக்கல் வாங்கல்களில் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க சம்பந்தப்பட்டுள்ளதாக நிதி மோசடி விசாரணைப் பிரிவுநேற்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சபரகமுவ பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவர்கள் முன்னெடுத்த சத்தியாகிரகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதன் பீடாதிபதிகள் பதவிகளிலிருந்து விலகியுள்ளனர்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்திய போது காவற்துறையினர் மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த பிக்கு மாணவர்கள் ஐந்து பேர் கொழும்ப தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.