Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

ஸீரோக்கள் ஆக்கப்பட்ட இந்தியாவின் உலக கிண்ண ஹீரோக்கள்.

அடுத்தாண்டு இடம்பெறவுள்ள உலக கிண்ணத்துக்கான கனவோடு சர்வதேச அளவில் அனைத்து அணிகளும் தங்களை தயார் படுத்தும் முனைப்பில் ஈடுபட்டுள்ளன.

உலக கிண்ணத்தை ஒரு முறையாவது ருசிக்க வேண்டும் எனும் கனவோடு பல அணிகளும் ,இன்னுமொரு தடவை ருசிக்க வேண்டும் எனும் கனவோடு சில அணிகளும் அடுத்தாண்டு உலக கிண்ணத்தை நோக்கி காத்திருக்கின்றன.

இப்படியான நிலையில்தான் ஒவ்வொரு அணிகளதும் உத்தேச அணி விபரம் அறிவிக்கபடுகின்றது.இளம் வீரர்களை பொறுத்த வரையில் இறுதி அணியில் இடம்பிடிக்காவிட்டாலும் பரவாயில்லை உத்தேச அணியில் அவர்களது பெயர் இணைக்கபடுவதையே அவர்கள் பெருமையாக கருதுகின்றனர்.

இப்படியிருக்க கடந்த உலக கிண்ண அணியில் இடம்பிடித்து அண்மைய நாட்களில் அணியிலிருந்து புறக்கணிக்கப்படும் நிலையிலும், ஓய்வை அண்மித்துக்காத்திருக்கும் மூத்த வீரர்களுக்கும் இதே நிலைப்பாடுதான்.

இளையவர்களை பொறுத்தவரையில் அணியில் இடம்பெறுவது ஒரு உற்சாகமாகவும், பழையவர்களை பொறுத்தமட்டில் இது ஒரு கௌரவமுமாகவே இந்த உத்தேச அணியில் இணைக்கபடுதல் நோக்கப்படுகின்றது.

இப்படியிருக்க இந்திய கிரிக்கெட் கட்டமைப்பை பொறுத்த வரையில் அவர்கள் அண்மைய நாட்களில் துணிகரமான முடிவுகளை எடுப்பவர்களாக பார்க்கப்படுகிறார்கள் அத்தோடு பாரட்டப்படுகிறார்கள்.அவர்கள் இப்போதைய நிலையில் கடந்த கால சாதனைகளை விடுத்து அண்மைய சாதனைகளையே பெருமளவில் கவனத்தில் கொள்வதுண்டு.சர்வதேச அளவில் கிரிக்கெட்டின் முடிசூடா மன்னர்களாக இருந்த/இருக்கும் அவுஸ்ரேலியர்கள் இவ்வாறான நிலைப்பாட்டில் தான் தங்களது அணிகளை தேர்வு செய்பவர்கள்.

அதுதான் அவர்களது தொடர்ச்சியான வெற்றி நிலைப்பட்ட பெறுதிகளுக்கான உச்சபட்ச காரணம் என்று சொல்லலாம்.ஆனால் ஆசிய நாட்டு அணிகளை நோக்கும் போது அவர்கள் தற்கால பெறுதிகளை விடவும் அவர்களது கடந்த கால சாதனைகளை கருத்தில் கொண்டு வாய்ப்புக்களை அள்ளி அள்ளி வழங்கி வருபவர்கள்.

இதற்கான பல உதாரணங்களை குறிப்பிட்டு விடலாம்.இப்படியான நிலையில் இதுவரை இருந்த இந்திய கிரிக்கெட் தேர்வு முறை இப்போது மாற்றம் கண்டிருக்கின்றமைதான் அவர்களது தொடர் ஒருநாள் வெற்றிகளுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது.

இந்த நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் உலக கிண்ணத்துக்கான உத்தேச 30 பேர் கொண்ட அணிவிபரம் அறிவிக்கபட்டிருக்கின்றது.

   

அதிலே பெரியளவில் ஆச்சரியங்கள் எதுவும் இல்லாவிட்டாலும் சிரேஸ்ட வீரர்கள் புறக்கணிக்கப்பட்டமை சிலருக்கு சிறியளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

காரணம் என்னவெனில் 28 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய அணி உலக கிண்ணத்தை ஏந்துவதற்கு பிரதான பாத்திரமேற்ற சாதனை நாயகர்கள் ஒட்டுமொத்தமாக ஓரம் காட்டப்பட்டிருக்கிறார்கள்.

கடந்த முறை உலக கிண்ணத்தை ஏந்திய அணியில் அங்கம் வகித்த நால்வரை தவிர அணியில் ஏனைய 11 பேர் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.



இந்த காணமல் போன 11 பேரில் சச்சின் ஓய்வு பெற்றுவிட்டார்.IPL சூதாட்டம் காரணமாக ஸ்ரீசாந்துக்கு போட்டித்தடை விதிக்கபட்டிருக்கிறது.வேகபந்து வீச்சாளர் பிரவீன் குமார் உள்ளூர் போட்டிகளில் கூட அடையாளமில்லாமல் போய்விட்டார்.

ஆனால் ஏனைய 8 வீரர்களும் IPL போட்டிகள், இந்தியாவின் மாநில அணிகளுக்கிடையிலான போட்டிகள் என்று தங்கள் அணிகளுக்காக கிரிக்கெட் ஆடி வருபவர்களே!

ஆகமொத்தத்தில் இந்தியாவின் இறுதி 15 பேர் கொண்ட உலக கிண்ண அணியில் இவர்கள் உள்வாங்கபடாவிட்டாலும் 30 பேர் கொண்ட அணியில் உள்வாங்கபடலாம் என்ற நிலையில் காத்திருந்து ஏமாறிப்போனவர்கள்தான்.

குறிப்பாக யுவ்ராஜ் ,சேவாக்,கம்பீர்,ஹர்பஜன்,சகீர்கான் ஆகிய வீரர்களின் கிரிக்கெட் எதிர்காலம் இதன்மூலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றது என்றும் கருதலாம் போலிருக்கின்றது.
இதுதான் இவர்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.

இப்படி சாதனைகளை சாதித்திருக்கும் மூத்த வீரர்கள் கவனிக்கபடாமல் இளம் வீரர்கள் பட்டாளம் அணியில் போட்டி போட்டுக்கொண்டு இடம்பிடித்திருக்கிறது என்றால் உண்மையில் இந்திய கிரிக்கெட் கட்டமைப்பை பாராட்டித்தான் ஆகவேண்டும்.

          

இந்தியாவின் தேசிய அணியை காட்டிலும் அவர்களது இரண்டாம் தர அணி பலமான அணியாக செயற்படுகின்றது,அந்த அணியில் அங்கம் பெற்றிருக்கும் வீரர்கள் தேசிய அணிக்கு வருவதற்கு கடும் போட்டி போட்டுக் கொண்டு வரிசைகட்டி நிற்கிறார்கள்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக,இலங்கை அணிக்கெதிராக என்று இந்த இளம் அணி பயிற்சி ஆட்டங்களில் எல்லாம் வெளுத்துக்கட்டியிருக்கிறது.இதைவிடவும் அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற இந்திய ,தென் ஆபிரிக்க,அவுஸ்ரேலிய A அணிகளுக்கிடையிலான மும்முனை போட்டிதொடரிலும் கிண்ணத்தை வெற்றி கொண்டது.

வெளிநாட்டு மண்களில் இந்திய தேசிய அணி டெஸ்ட் போட்டிகளில் தடுமாறினாலும் இந்த இந்திய A அணியானது அவுஸ்ரேலிய A அணிக்கெதிரான உத்தியோக பற்றற்ற டெஸ்ட் போட்டிகளிலும் மிகப்பெரும் திறமையை காட்டி வியக்கவைத்தது.

அப்படியான திறமையான வீரர்களை கொண்ட இளம் இந்திய அணியில் அண்மைய நாட்களில் இந்தியாவின் 2011 உலக கிண்ண ஹீரோக்கள் எவருமே இடம்பிடிக்கவில்லை என்பதும் நோக்கத்தக்கதுவே .அந்தளவிற்கு இளம் வீரர்கள் தங்கள் திறமையை வெளிக்காட்டி தேர்வாளர்களுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தவர்கள் எனலாம்.

             

இப்படியான நெருக்குதல்களுக்கு மத்தியில் கடந்த உலக கிண்ண போட்டிகளின் போது சாகசங்கள் புரிந்து நெருக்கடியான பல தருணங்களில் நேர்த்தியாக துடுப்பாட்டம் பந்துவீச்சு என்று பலவழிகளிலும் அணிக்கு பலமாக செயற்பட்ட யுவ்ராஜ் சிங் சேர்க்கப்படவில்லை என்பது ஏமாற்றமேதான்.

காம்பிர்,சேவாக் ஆகிய வீரர்களின் அண்மைய பெறுதிகள் பெரியளவில் பேசப்படும் நிலையில் இல்லை என்பது உண்மைதான்.ஆரம்ப வீரர்கள் நிலைக்கு தவான்,ரோஹித் சர்மா,ராஹனே,உத்தப்பா என்று பல திறமையான இளம் வீரர்கள் இவர்களது வரவை கேள்விக்குறியாக்கி விட்டார்கள்.



அத்தோடு சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் இளம் வீரர்களான அஸ்வின்,ஜடேஜா ,அக்ஸ்சார் பட்டேல் ஆகியோரோடு போட்டி போட முடியாமல் இடத்தை இழந்திருக்கின்றார்.

36 வயதாகும் வேகபந்து வீச்சாளர் சகீர்கான் வேகத்தையும் இழந்திருப்பதோடு இளம் வீரர்களான புவனேஸ்வர் குமார்,சாமி அஹ்மத்,வருண் ஆரோன்,உமேஷ் யாதவ்,மோகித் சர்மா ஆகிய வீரர்களுடன் ஒப்பிடுகின்ற நிலையில் அனுபவம் என்பது சாதகமாக இருந்தாலும் திறமை என்பதும் ,வேகமும் இவர் இடத்தையும் கேள்விக்குறியாக்கி விட்டிருக்கிறது.

            

இவர்களெல்லாம் கடந்த காலங்களிலும் ,கடந்த உலக கிண்ண போட்டிகளின் போதும் இந்திய அணியில் மிகப்பெரும் வகிபாகமாக இருந்தாலும் அண்மைய நாட்களில் இவர்களது சேவை என்பது தேவையற்றுப் போயிருக்கின்றமை தான் நிதர்சனம்.

கடந்த காலங்களில் இவர்களது சாதனைகளை கருத்தில் கொண்டு குறைந்தது 30 பேர் கொண்ட பட்டியிலிலாவது இடத்தை கொடுப்பதற்கு இந்திய தேர்வுகுழு விரும்பியிருப்பினும் எதிர்கால அணியின் நலனை கருத்தி கொள்ளும்போது கேள்விகள் வலுப்பெற்று நிற்கின்றன.

எது எவ்வாறாயினும் அண்மைய நாட்களில் மிகப்பெரும் திறமையை வெளிக்காட்டிவரும் இளம் வீரர்களான உண்முக்த் சண்ட்,மியாங் அகர்வால் ஆகிய வீரர்களைகூட அணியில் தேர்வு செய்ய முடியாது உள்ள நிலையில் உள்ளூர் போட்டிகளில் பெருமளவில் பேசப்படாத சிரேஸ்ட வீரர்கள் சேர்ப்பு என்பதும் நேர்த்தியல்லவே.

கடந்த முறை உலக கிண்ணத்தை ஏந்தி சாதனைகள் பல படைத்த டோனி தலைமையிலான இந்திய அணி அதனை தக்க வைப்பதற்கு போட்டி போடக் கூடிய நிலையில் வலுவாகவே இருக்கின்றது.

வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவினாலும் ஒருநாள் போட்டிகளில் அவர்கள் மோசமான தோல்விகளை தழுவியதில்லை.

வேகபந்துக்கு சாதகமான இங்கிலாந்து,அவுஸ்திரேலிய,நியூஸ்லாந்து மண்ணில் இந்தியாவின் ஒருநாள் வெற்றிகள் மோசமான நிலையில் இல்லாத நிலையில் அவர்களது TEST தோல்விகளை வைத்துக் கொண்டு சோபிக்க தவறுவார்கள் என்று கணிப்பது தவறாகிவிடலாம்.

எது எவ்வாறாயினும் இப்போது தேர்வு செய்யப்பட்டிருக்கும் 30 பேர் கொண்ட உத்தேச அணியிலிருந்து இறுதி 15 பேர் கொண்ட அணியில் இந்த வீரர்களை எதிர்பார்க்கலாம்.



1.சிகார் தவான்,
2.ரோஹித் சர்மா,
3.விராத் கொஹ்லி,
4.அஜின்கியா ரஹானே
5.சுரேஷ் ரைனா,
6.MS டோனி,
7.அம்படி ராயுடு,
8.ராபின் உத்தப்பா ,
9.ரவீந்திர ஜடேஜா,
10.ரவிச்சந்திரன் அஸ்வின்,
11.அக்சார் பட்டேல்/கரன் சர்மா,
12..புவனேஸ்வர் குமார்,
13..மொகம்மது சாமி,
14.இஷாந்த் சர்மா,
15.வருண் ஆரோன்,
16.உமேஷ் யாதவ்/மோஹித் சர்மா

அடுத்தடுத்து 2 உலக கிண்ணங்களை வெற்றி கொண்ட மேற்கிந்திய தீவுகள்,அவுஸ்ரேலிய அணிகளை போன்று இந்தியாவும் சரித்திரம் படைக்க இப்போதைய நிலையில் அவர்களுக்கு பந்து வீச்சு கைகொடுக்குமாயின் இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் இன்னுமொரு அசத்தல் உலக கிண்ண வெற்றி எதிர்பார்ப்புகளோடு காத்திருக்கலாம்.

*தில்லையம்பலம் தரணீதரன்
 05.12.2014







8,459 Views

மீண்டும் மோதலில் தல - தளபதி......?????

"தல" ன்னா சும்மாவா....? என்று 'தல' அஜித் ரசிகர்கள் தங்கள் சேட் கொலரை தூக்கிவிடும் அளவுக்கு அட்டகாசமாக வெளியாகியுள்ளது "என்னை அறிந்தால்" படத்தின் விளம்பர முன்னோட்டக்காட்சி. இந்தப் படத்தின் வெளியீட்டுத் திகதியில் குழப்பநிலை காணப்பட்டாலும், நேற்று வெளியான இந்த முன்னோட்டக்காட்சியே தமிழ்த்திரையுலகப் பிரபலங்கள் பலரிடமிருந்து பெரும் பாராட்டையும் வரவேற்பையும் அள்ளிக்கொண்டுள்ளதாம்.

நேற்றையதினம் YOUTUBE இணையத்தளத்தில் தரவேற்றம் செய்யப்பட்ட இந்த விளம்பர முன்னோட்டக்காட்சி, வெளியான 24மணித்தியாலங்களுக்குள் 13.5லட்சம் பார்வையாளர்கள் எண்ணிக்கையை தொட்டிருக்கின்றதாம். அதேவேளை இதற்கான LIKES மட்டுமே 41660 என்ற எண்ணிக்கையை கடந்து சென்றுகொண்டிருக்கின்றது.

இது இவ்வாறிருக்க, தீபாவளி அன்று வெளியாகி சூப்பர்ஹிட் படமாக ஓடிக்கொண்டிருக்கும் இளையதளபதி விஜய்யின் "கத்தி" படத்தோடு ஒப்பீடு ஒன்றை மேற்கொண்டு, 'தல' ரசிகர்கள் இளையதளபதி ரசிகர்களை சீண்டிப்பார்க்கும் வேலையில் இறங்கியுள்ளனராம். இதன்படி "கத்தி" படத்தின் விளம்பர  முன்னோட்டக்காட்சி ஒக்டோபர் 18-ம் திகதி வெளியாகியதாகவும், அன்றிலிருந்து இன்று வரையான 21/2 மாத காலத்தில் அதற்கான LIKES 32107 என்ற எண்ணிக்கை மட்டுமே என்றும், "என்னை அறிந்தால்" வெளியான 18மணித்தியாலங்களிலேயே இந்த எண்ணிக்கையை கடந்துள்ளதாகவும் சொல்லியிருக்கும் அஜித் ரசிகர்கள் "தல" எப்பவும் "தல" தான் என்றும் கூறியுள்ளார்களாம்.

இந்தநிலையில் தற்போது 'இளையதளபதி' விஜய் ரசிகர்களுக்கும், 'தல' அஜித் ரசிகர்களுக்குமான மோதல் உக்கிரமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.   

 

*கணேசமூர்த்தி ராகவன்.

695 Views
இரட்டைச்சவாரி செய்யும் இளையதளபதி

வித்தியாசமான கதைக்களங்களைக்  கொண்ட ஃபெண்டஸி படங்களை இயக்கும் சிம்புதேவனின் இயக்கத்தில் தற்போது இளையதளபதி விஜய் நடித்துக் கொண்டிருக்கின்றார் என்பதையும், அந்தப்படத்தில் நடிக்கும் நட்சத்திரப்பட்டாளம் உட்பட படம் பற்றிய சுவாரஸ்யமான விசயங்களை ஆரம்பத்தில் சொல்லியிருந்தோம்.

 இந்தப்படத்தில் ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் என இரண்டு கதாநாயகிகளுடன் இரட்டைச்சவாரி செய்யும் நம்ம இளையதளபதி, "கத்தி" படத்தைப்போலவே இதிலும் இரண்டு வேடங்களில் நடிக்கின்றாராம். மன்னர் காலத்துக்கதை ஒன்றுதான் இந்தப்படத்தின் கதைக்கரு எனச் சொல்லப்படும் நிலையில், 'ராஜா' வேடத்தில் வரும் விஜய்க்கு ஹன்சிகா ஜோடியாக நடிக்க, இன்னொரு பாத்திரத்தில் நடிக்கும் விஜய்க்கு ஸ்ருதிஹாசன் ஜோடியாகியிருப்பதாகவும் கதைகள் கசிந்துகொண்டிருக்கின்றன.

இன்னமும் பெயர் சூட்டப்படாது, "விஜய்58" எனக் குறிப்பிடப்படும் இந்தப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை கிழக்குக்கடற்கரைச்சாலை பகுதியில் போடப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான அரண்மனை போன்ற 'செட்'இல் படமாக்கப்பட்டுவரும் நிலையில்  இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறதாம்.

இந்தநிலையில், இரண்டாம்கட்ட படப்பிடிப்பு ஆரம்பித்துள்ளதோடு அதில் 'ராஜா' வேடத்தில் வரும் விஜய்க்கு ஜோடியான ஹன்சிகா இளவரசியாக தோன்றுகின்ற காட்சிகள் படம்மாக்கப்படுகின்றன. அதனால் இளவரசியாக வரும் ஹன்சிகா  கத்திச்சண்டை போடும் காட்சி ஒன்று படமாக்கப்படவுள்ளதாகவும், அதற்காக அவர் பெரும் சிரமத்துக்கும், பிரயத்தனத்துக்கும் மத்தியில்  வாள்பயிற்சி எடுத்திருப்பதாக சொல்லியிருக்கின்றாராம் இந்த அழகுப்பதுமை.

அதுமட்டுமல்லாமல் இன்னும் இந்தக்காட்சி படம்மாக்கப்படவில்லை என்பதனால், "எப்போது இந்தச்சண்டை படமாக்கப்படும் என்ற அதிக ஆவலோடு, கத்திச்சண்டை போடுவதற்கு இந்த இளவரசி காத்துக்கொண்டிருக்கிறேன். கொஞ்சம் பயமாகவும் படபடப்பாகவும் இருக்கிறது.ஆனாலும் இளவரசி தயார்" என்று twitter சமூக வலைத்தளத்தில் சந்தோஷமாக கூறியுள்ளாராம்.

இதேவேளை நாங்கள் முன்னரே கூறியிருந்தது போல, இளையதளபதி விஜய்யின் மக்கள் தொடர்பு அதிகாரி(PRO) பி.டி.செல்வக்குமார் இந்தப்படத்தை தயாரிக்க, விஜய்யின் படங்களை கேரளாவில் வெளியிடும் நிறுவனமான தமீன்  ஃபிலிம்ஸ் அவரோடு இந்த படத்தயாரிப்புப்பணியில் தற்போது இணைந்துள்ளதாகவும் தமிழ்சினிமாத்தரப்பு தகவல்கள் சொல்கின்றன.


யார் இணைந்தாலும் பிரிந்தாலும் வரும் லாபம் என்னவோ இளையதளபதிக்கு தானாம்.... சொல்கின்றார்கள் கோடம்பாக்கத்தினர்.

*கணேசமூர்த்தி ராகவன்.
12,525 Views
இளைய தளபதியாக தமிழ் திரையுலகில் 22 ஆண்டுகள் விஜய் ராஜ்ஜியம் 

ரசிகர்களால் இளைய தளபதி என செல்லமாக அழைக்கப்படும் விஜய் தனது சினிமா வாழ்வில் காலடி எடுத்து வைத்து இன்றுடன் 22 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இந்த சாதனைப் பயணத்தில் வெற்றி நாயகனாக பயணித்துக்கொண்டிருக்கும் இளைய தளபதிக்கு வாழ்த்துக்களை சூரியன் சார்பில் தெரிவித்துக்கொள்வதோடு, ரசிகர்களைத் சுண்டியிழுக்கும் இவரின் சினிமா வாழ்க்கையைச் சற்றுத் திரும்பிப் பார்ப்போம்.

1992ம் ஆண்டு தன்னுடைய தந்தையான எஸ். ஏ. சந்திரசேகரின் இயக்கத்தில் ‘நாளைய தீர்ப்பு’ திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார். இதற்கு முன் இவர் சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தாலும், நாயகன் என்ற அந்தஸ்த்தை வழங்கியது நாளைய தீர்ப்பு திரைப்படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

18 வயது மட்டுமே நிரம்பிய இளைஞனாக சினிமாவிற்குள் வந்தவர் இளையதளபதி விஜய். சிறிது காலத்திலேயே காதல் நாயகனாக கன்னியர் மத்தியில் வலம் வந்தவர். 1997ல் வெளியான லவ் டுடே, பூவே உனக்காக, நேருக்கு நேர், காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு, போன்ற திரைப்படங்கள் மிகவும் பேசப்பட்டன. பூவே உனக்காக திரைப்படத்தின் க்ளைமெக்ஸில் விஜய் பேசிய காதல் தொடர்பான வசனம் இன்று வரை பேசப்படுகின்ற பிரபல வசனம் எனலாம். அதன் பின் வெளியான, நினைத்தேன் வந்தாய், ப்ரியமுடன் , துள்ளாத மனமும் துள்ளும் ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றித்திரைப்படங்களாக கருதப்பட்டவை. இதன் பின் விஜய்க்கு வாய்ப்பில்லை என்று கூறியவர்களெல்லாம் யோசிக்கும் அளவில் வெளியான திரைப்படம் தான் ‘குஷி’. இத்திரைப்படம் இப்போது திரையிடப்பட்டாலும் பார்த்து ரசிக்க காத்திருக்கும் ரசிகர்கள் ஏராளம்.

இடைநடுவே குருவி, சுறா போன்ற திரைப்படங்கள் தோல்வியடைந்திருந்த போதிலும், ப்ரெண்ஸ், பத்ரி முதல் துப்பாக்கி வரை வந்த படங்கள் பெரிதும் பேசப்பட்டன. இந்த காலகட்டத்தில் தான் இவர் வசூல் மன்னனாக வலம் வர ஆரம்பித்திருந்தார். மேலும் பாடகராகவும், நடன கலைஞராகவும் கூட கலக்கிகொண்டிருக்கிறார் இளைய தளபதி.

அண்மையில் வெளியான துப்பாக்கி திரைப்படம் சுப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் கத்தியும் சக்கைபோடு போட்டது. அடுத்தடுத்த திரைப்படங்கள் மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

*பிரவீனா 
585 Views

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘என்னை அறிந்தால்’ படத்தின் வேலைகள் பரபரப்பாக நடந்துகொண்டிருக்க,
நள்ளிரவில் வெளியாகிய என்னை அறிந்தால் டீசர் அனைத்துத் தரப்பினராலும் வரவேற்கப்பட்டு படி தொட்டியெங்கும் பரபரப்பைக் கிளப்பிக்கொண்டுஇருக்கிறது.

அஜித் நடிப்பில் வெளிவந்த ‘மங்காத்தா’, ‘பில்லா 2’, ‘ஆரம்பம்’ படங்களை தொடர்ந்து ‘என்னை அறிந்தால்’ படத்தின் ஆடியோ ரைட்ஸையும் பிரபல சோனி நிறுவனம் கைபற்றியுள்ளது.
ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கும் இப்படத்தில் 6 பாடல்கள் இடம் பெறுகிறது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு புதிய யுக்தியாக இப்படத்தின் ஒவ்வொரு பாடலை வாரத்துக்கு ஒன்று என்ற கணக்கில் இனி வரும் வாரங்களில் வெளியிட இப்படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆக, நாளுக்கு நாள் ‘என்னை அறிந்தால்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

536 Views
ரொம்ப கஷ்டப்பட்டு படம் நடிச்சிட்டு, வெற்றி, புகழாரவாரங்களுக்கு மத்தியில் பிரபல ஹீரோக்களே அமைதியாக இருக்கும் போது. இந்த ரசிகர்கள் பண்ணுற கூத்திருக்கே அப்பப்பா தாங்கவே முடியாது. அதுவும் அஜித், விஜய் ரசிகர்கள் என்றால் சொல்லவே வேண்டாம்.

இவர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியானால், ரசிகர்களின் அக்கப்போர் தாங்கவே முடியாது. ஆனால் இந்தநிலை இப்போது மாறியுள்ளது. சில மாதங்களாக ஒரு புதிய ட்ரெண்ட் உருவாகி வருகின்றது. விஜய் படங்களுக்கு அஜித் ரசிகர்கள் வாழ்த்து தெரிவிப்பதும். அஜித் படத்திற்கு விஜய் ரசிகர்கள் வாழ்த்தி போஸ்ட்டர் ஒட்டுவதும் தான் இப்போதைய டிரெண்ட். இது நல்ல விஷயம் தான் இப்படியே தொடரட்டும்.

விரைவில் வெளியாக காத்திருக்கும் தலயின் 'என்னை அறிந்தால்' திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்திற்கும் விஜய் ரசிகர்கள் வாழ்த்தி போஸ்ட்டர் ஒட்டியிருக்கின்றார்கள், மதுரையில்.

இதில் 'தலயின் தரிசனத்திற்க்காக காத்திருக்கிறோம்' இப்படிக்கு எவனுக்கும் அடங்காத விஜய் வெறியர்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். போஸ்ட்டர நீங்களே பாருங்க...



என்னை அறிந்தால் தீசர் - இங்கே 


ர.பிரவீனா 
11,705 Views
கத்தியை தொடர்ந்து 'லிங்கா'வும் வழக்கு விசாரணையில்..???

கோடம்பாக்கத்திலிருந்து வெளியாகும் படங்கள் எல்லாம் சொல்லப்பட்ட திகதியில் வெளியாகி திரைக்கு வருகின்றதோ இல்லையோ நீதிமன்றம் செல்லத் தவறுவதில்லை. இந்த வரிசையில் இறுதியாக இணைந்தது சூப்பர்ஸ்டார் ரஜினியின் லிங்கா.

 இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் இந்தப் படத்தில் ரஜினி, அனுஷ்கா,சோனாக்க்ஷி ஷின்ஹா மற்றும் பலர் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசை வழங்குகிறார். ரொக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கின்றார். இந்தநிலையில் ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12-ம் திகதி வெளியாகவிருந்தது லிங்கா.

இவ்வாறான நிலையில் முல்லைவனம்999 என்ற தனது கதையையே இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் திருடி "லிங்கா" என்ற பெயரில் இயக்கியிருப்பதாகவும் அதனால் "லிங்கா" வெளியாவதற்கு தடை விதிக்க வேண்டுமெனவும் மதுரை  உயர்நீதிமன்றக்கிளையில், மதுரையைச் சேர்ந்த சின்னத்திரைத்தொடர் இயக்குனர் கே.ஆர்.  ரவி ரத்தினம் மனுத்தாக்கல் செய்திருந்தார்  என்பதையும், அந்த வழக்கு இடம்பெறுகின்ற தகவல்களையும் உங்களுக்கு நாங்கள் ஏற்கனவே சொல்லியிருந்தோம்.
                                                
இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்த நீதிபதி வேணுகோபால். படக்குழுவில்  முக்கியமானவர்களான ரஜினி, ரவிக்குமார், வெங்கடேஷ் மற்றும் லிங்கா கதாசிரியரான போன்குமாரன் ஆகியோரிடம் விளக்கம் கேட்டிருந்தார். அதற்கு அவர்கள் நால்வரும் தமது விளக்க மனுவை தனித்தனியாக நீதிமன்றில் சமர்ப்பித்திருந்தனராம்.

இவ்வாறு அவர்கள் அனுப்பிய விளக்கங்களை ஆராய்ந்ததோடு, வாதப் பிரதிவாதங்கள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் நீதிபதி இந்த வழக்கிற்கான தீர்ப்பை முடிவு செய்ததோடு இறுதித் தீர்ப்பு வழங்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது  .
                                
இப்படியான இழுபறி நிலையில் இருந்த 'லிங்கா' வழக்கு காரணமாக, லிங்கா டிசம்பரில் வெளியாகுவது சந்தேகம் என்ற நிலையில் கவலையில் ஆழ்ந்திருந்தனர் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள். இவ்வாறு கலையில் இருந்த ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் லிங்கா படக்குழுவினருக்கும் சந்தோசம் தரும் முடிவை சொல்லியிருக்கிறதாம் மதுரை உயர்நீதிமன்றக்கிளை.

திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. லிங்காவை தடை செய்ய வேண்டுமென தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் தள்ளுபடி செய்வதாக நீதிபதி வேணுகோபால் உத்தரவிட்டுள்ளாராம். தேவை ஏற்படுமிடத்து மனுதாரர் நட்டஈட்டு நிவாரணம் கோரி சிவில் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் மதுரை உயர்நீதிமன்றக்கிளை நீதிபதி வேணுகோபால் தனது தீர்ப்பில் கூறியுள்ளாராம்.

இந்தத் தீர்ப்பினால் மீண்டும் ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12-ம் திகதி லிங்கா வெளியாகும் நிலையில் உள்ளதாக படக்குழுவினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனராம்.  

'ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னது மாரி' என்ற சூப்பர் ஸ்டாரின் சூப்பரான பஞ்ச் பேசி கலாய்க்க ஆரம்பித்திருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

*கணேஷமூர்த்தி ராகவன்


847 Views
மைக்கல் கிளார்க்கின் மனது மறக்காத உருக்கமான உரை.

மறைந்த கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸின் இறுதிச் சடங்கை தனது இறுதி அஞ்சலி உரையால் தலைமையேயேற்று நடத்தினார் அவுஸ்திரேலிய அணித்தலைவர் மைக்கேல் கிளார்க்.

இறுதிச் சடங்கு அவுஸ்திரேலிய தொலைக்காட்சி, வானொலியில் நேரலையாக ஒளிபரப்பாகியது. ஒரு அணியின் தலைவராக அல்லாமல் ஒரு கனவான் தன்மையானவராக கிளார்க் உயர்வான இடத்தில் நேசிக்கபடுகின்றார்.

கிளார்க் தனது அஞ்சலி உரையை நிகழ்த்தும் முன் கண்ணீரை அடக்க முடியாமல் திக்கு முக்காடிப்போனார்.

அவர் பேசும்போது, “வியாழக்கிழமை இரவு சிட்னி மைதானத்திற்குச் சென்றிருந்தேன். அதே புல் இதழ்களின் மீது நானும், பிலிப் ஹியூஸ், மற்றும் அவரது சகாக்களும் எத்தனையோ முறை ஜோடி சேர்ந்து ஆடியுள்ளோம். சிறுவர்களாக எங்களது தலையில் நாங்கள் வரைந்து கொண்ட கனவினை இங்கு வாழ்ந்தோம்.

இதே மைதானத்தில் ரசிகர்கள் எழுந்து நின்று ஆரவாரம் செய்துள்ளனர். இதே எல்லைக்கோட்டிற்கு அவர் எத்தனை முறை பந்துகளை அடித்திருப்பார்? ஆனால் இதே இடம்தான் அவரை இனி எழுந்திருக்க முடியாமல் வீழ்த்தியது. நான் முழங்காலிட்டு புற்களைத் தொட்டேன். அவர் என்னுடன் இருக்கிறார். நான் என்னைக் கிள்ளிப்பார்த்துக் கொண்டேன், அவர் தேநீர் இடைவேளைக்கு முன் நாம் சிறிது நேரம் ஆடவேண்டும் என்கிறார். ஒரு தளர்வான ஷாட்டை நான் ஆடியதை எனக்கு அவர் அறிவுறுத்துகிறார். அன்று இரவு என்ன சினிமா நாம் பார்க்கவேண்டும் என்று பேசுகிறோம்.

இந்த மைதானத்தில் அவரது ஆன்மா இருக்கிறது. எனக்கு இந்த மைதானம் எப்போதும் புனிதமானது. அவருக்கு கிரிக்கெட் உலகிலிருந்து வரும் அஞ்சலிகள் என்னை நெகிழச்செய்கின்றன.

இதுதான் கிரிக்கெட் உணர்வு என்பதா? கராச்சியில் ஒரு சிறுமி மெழுகுவர்த்தியுடன் அஞ்சலி செலுத்துகிறார். கிரிக்கெட் ஆட்டத்தின் மாஸ்டர்களான சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, வார்ன், ஆகியோர் தங்களது துயரத்தை உலகிற்குக் கூறுகின்றனர். கிரிக்கெட் உணர்வு நம் அனைவரையும் ஒன்றிணைக்கிறது. ஒரு கவர் டிரைவின் த்ரில் நமக்கு இத்தகைய உணர்வைக் கொடுக்கும்.

நமக்குத் தெரியாத பலர் லார்ட்ஸ் மைதானத்தில் மலரஞ்சலி செலுத்துகின்றனர். இதுதான் நமது விளையாட்டை உலகின் மிகப்பெரிய விளையாட்டாக உருவாக்கியுள்ளது. பிலிப் ஹியூஸின் ஆன்மா எப்போதுமே இனி நமது கிரிக்கெட் ஆட்டத்தின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. நாம், அவர் நேசிக்கும் இந்த ஆட்டத்தின் பாதுகாவலர்களாக செயல்படுவோம்.

நாம், ஆட்டத்தின் உணர்வைக் கேட்டறிய வேண்டும், நாம் அதனைக் கொண்டாட வேண்டும். நாம் அதிலிருந்து வாழ்க்கைப்பாடத்தைக் கற்க வேண்டும்.

என் சகோதரனே! அமைதியாக ஓய்வெடு! நான் உன்னை மைதானத்தில் சந்திக்கிறேன்”

இவ்வாறு கிளார்க் உருக்கமாக பேசினார்.

*நன்றி -இணையம்
696 Views
1995 ம் ஆண்டு 'தொட்டாச்சிணுங்கி' திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் தேவயானி.
அதன் பின்னர் 'காதல் கோட்டை' திரைப்படம் இவருக்கு நல்லதொரு பெயரை தமிழ் திரையுலகில் பெற்றுக்கொடுத்தது. அதன் பின் சூரியவம்சம், ப்ரண்ட்ஸ், தென்காசிப்பட்டணம், தெனாலி, வல்லரசு, உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
பின்னர் வாய்ப்புக் குறையும் நேரங்களில் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து மேலும் பிரபலமாகியிருந்தார்.

இவர் 2001 ம் ஆண்டு இயக்குனர் ராஜகுமாரனைத் திருமணம் செய்துக்கொண்டார். இப்போது அவருக்கு 40 வயதாகிறது, 2 குழந்தைகளின் தாயான தேவயானி, நடிப்பதை சற்றே தள்ளிவைத்துவிட்டு, குடும்ப வாழ்வின் தன்னை முழுதும் ஈடுபடுத்தியிருந்தார். இப்போது இவர் திடீரென ஆசிரியராக கடைமையாற்ற ஆரம்பித்திருக்கிறார்.

இது பற்றி அவர் தெரிவிக்கையில், எனக்கு எப்போதும் எதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உண்டு. எனவே தான் இந்த முடிவை எடுத்தேன், மேலும் எனக்கு ஆசிரியராக வேண்டும் என்ற ஆசையிருந்தது என்கிறார் தேவையானி.
தன்னுடைய இரு மகள்களும் கல்விப்பயிலும் பாடசாலையில் தேவயானி தற்போது ஆசிரிய கடமையில் ஈடுபட்டிருக்கிறார். இவரின் வகுப்பில் 45 குழந்தைகள் உள்ளனராம். நடிகை தேவயானி தான் எங்களின் வகுப்பாசிரியர் என்பதில் குழந்தைகளுக்கும் பெருமையாம்....

திரைப்படங்களில் இவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களைப் போலவே, சாந்தமாகவும், அமைதியாகவும் குழந்தைகளுக்கு கற்பித்து வருகிறாராம் தேவயானி.















7,944 Views
சூப்பர் ஸ்டாரின் லிங்கா படம் முடிவடைந்துள்ள நிலையில், அப்படம் எப்போது வெளியாகும் என நாட்கள் எண்ண ஆரம்பித்துவிட்டனர் ரசிகர்கள். இது இப்படியிருக்க ரஜினியின் அடுத்த படம் தொடர்பில் சில தகவல்கள் சினி வட்டாரத்திலிருந்து கிடைத்துள்ளது.

ம்ம்ம்ம்ம் எங்களைப் போலவே நீங்களும் இது தொடர்பில் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பது தெரிகிறது.
லிங்கா முடிந்ததும், தனது அடுத்த படத்தையும் K.S.ரவிகுமார் தான் இயக்குவார் என ரஜினி கூறியதாக சில தகவல்கள் உலாவந்த நிலையில், இப்போது சூப்பர் ஸ்டாரின் அடுத்தப் படம் ஷங்கர் கையில் எனும் செய்தி உலா வருகிறது. இப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு இரு வேடங்கள் என்பது மட்டும் தான் இதுவரை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இப்படத்தின் ஏனைய பணியாளர்கள் பற்றி எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. மேலும் இப்புதிய படத்திற்கு அதிக காலம் செலவழியாது என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் லிங்கா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் பேசும் போது படங்கள் வெளியாவதற்கு அதிக காலம் செல்வதை நான் விரும்பவில்லை என்று கூறினார். இந்த மேடையில் ஷங்கரும் இருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்கள் இணைந்து பணியாற்றிய சிவாஜி வெளியாக 2 வருடங்களும், எந்திரன் வெளியாக இரண்டரை வருடங்களும் எடுத்தது அனைவரும் அறிந்ததே.

எது எப்படியிருந்தாலும் ஷங்கர் - ரஜினி இணையும் அடுத்த படம் விரைவில் வரும் எனவும் உறுதிப்படுத்திய தகவல்கள் வெகுவிரைவில் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


ர. பிரவீனா
480 Views
மீண்டும் சிக்கலில் இளையதளபதி விஜய்...?

தான் நடித்த படம் ஒன்று வெளியாகுவதிலிருந்து அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வரும்வரை சர்ச்சைகளுக்கு மிச்சம் வைக்காத ஒரு நாயகன் என்றால் நம்ம 'இளையதளபதி'யை மிஞ்ச தமிழ்த் திரையுலகில் யாருமில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் விஜய்.

இயக்குனர் சிம்புதேவன் இயக்கும் அடுத்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றநிலையில், அரசியலுக்கு வரும் ஆசையில் அதற்கான தனது நகர்வுகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறாராம் விஜய். அதனால் தனது தனிப்பட்ட வேலைகளை மட்டும் கவனிப்பதோடு நிறுத்தி விடாமல், "மக்கள் இயக்கம்" என்ற பெயரில் தான் ஆரம்பித்த அறக்கட்டளை மூலம் வறுமைப்பட்ட ஏழை மக்களுக்கு உதவிகளை வாரி வழங்குவதோடு, ஏழைக் குழந்தைகளின் கல்விக்கும் உதவிகளை அள்ளி வழங்கிக்கொண்டிருக்கிறாராம்.

 இவ்வாறு உதவிகளை வழங்கும் இளையதளபதிக்கு தற்போது அதுவே பெரும் தலைவலியைக் கொண்டுவந்திருப்பதாக செய்திகள் வெளியாக ஆரம்பித்திருக்கின்றன. அண்மையில் "ஹுட்ஹுட்" புயல் ஆந்திர மாநிலத்தை தாக்கி அழிவை ஏற்படுத்தியிருந்தமை தெரிந்ததே. இதனால் அந்தமாநில மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்தது. இதற்கு நம்ம இளையதளபதி விஜய்யும் 5லட்சம் நிதியுதவி செய்திருந்தாராம். எத்தனையோ நடிகர்கள்  நன்கொடையாக நிதி வழங்கியிருந்ததோடு அவற்றை அமைதியாக செய்துள்ள நிலையில், விஜய் செய்த உதவி பெரிதாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

                                  இந்த விஷயம் வெளிவந்த நிலையில், கத்தி திரைப்படத்தில் "லைக்கா" நிறுவனத்தின் தயாரிப்பில் நடித்து தமிழ்மக்களின் வெறுப்பை சம்பாதித்ததோடு நிறுத்தாமல், தற்போது தமிழ்நாட்டில் எத்தனையோ மக்கள் வறுமையில் வாட அவர்களை விட்டுவிட்டு இன்னொரு மாநிலத்தில் தன் பெருந்தன்மையைக் காட்டி மக்களிடம் புகழ்தேடுகின்றார் விஜய் என ஒருசாராரிடமிருந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளதாம்.

 ஆனால் விஜய்க்கு ஆதரவான மனநிலையில் உள்ளவர்களோ, தன் மாநில மக்களுக்கு மட்டுமல்லாமல் அயல்மாநில மக்களுக்கும் உதவுகின்ற பெரிய மனதுடையவர் என்றும், உயர்ந்த எண்ணம் கொண்டவர் எங்கள் இளையதளபதி என்று  புகழ்கின்றார்களாம்.                                                
                                                
உங்கள் உள்ளக்கிடக்கையை யார் தான் உணர்வாரோ இளையதளபதி.............?
எல்லாம் உங்களுக்கே வெளிச்சம்.                                             

*கணேசமூர்த்தி ராகவன்.
473 Views
விஜய் கெமராவுக்கு முன்னால் ஒரு மாதிரியும், கெமராவுக்கு பின்னால் ஒரு மாதிரியும் இருப்பார் என கூறுகிறார் சமந்தா.

ஹைதரபாத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியொன்றில், தமிழில் வெற்றி நாயகியாக வலம் வந்துக்கொண்டிருக்கும் நடிகை சமந்தா, தெலுங்கின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு, போன்றோர் கலந்துகொண்டிருந்தனர். இந்த நிகழ்ச்சி மேடையில் மகேஷ் பாபு சமந்தாவிடம் ' விஜயுடன் நடித்த அனுபவம் பற்றி கூறுங்களேன் என்று கேட்க ....
சமந்தா கூறிய பதில் தான் 'விஜய் ஒரு விசித்திரப் பிறவி, அவரா இவர் என்று தோன்றும்' என்பது.

விஜய் கெமராவுக்கு முன்னால் ஒரு மாதிரியும், கெமராவுக்கு பின்னால் ஒரு மாதிரியும் இருப்பார், 2 மணிநேரங்களுக்கு மேல் யாரோடும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருப்பார். கெமரா முன்னால் வந்ததும், நகைச்சுவை, அடிதடி என பின்னியெடுப்பார். அப்போது அவரா இவர் என்று தொன்றும் என்றார் சமந்தா. மேலும் அவர் கூறுகையில், ஸ்பிலிட் பெர்சனாலிடியோ என்று கூட யோசித்திருக்கிறேன் என்றார். எத்தனையோ முறை வியந்து பார்த்துள்ளேன் என்கிறார் சமந்தா.

- ர.பிரவீனா
504 Views
"செல்லமே"எனத் தொடங்கி இப்போது "ஆம்பள" என நெஞ்சை நிமிர்த்தி வளர்ந்து நிற்கிறார் விஷால். உதவி இயக்குனராக கோடம்பாக்கத்தில் கால் பதித்து தற்போது வரிசைகட்டி பல படங்களில் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கின்றார் இந்த "சிக்ஸ்பெக்" கறுப்புக்கட்டழகன்.

இயக்குனர் சுந்தர்.சி யின் இயக்கத்தில் "ஆம்பள" படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் விஷால், நடிப்பில் பெயர் எடுத்தாரோ...? இல்லையோ? சர்ச்சைகளின் மூலம் பெயர் வாங்கிக் கொண்டிருக்கிறார். திருட்டு VCD ஒழிப்பு, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவரும் நடிகருமான சரத்குமாருடனான முறுகல் என தினந்தினம் ஊடகங்களுக்குத் தீனி போட்டுக்கொண்டிருக்கிறார் எனச் சொல்லலாம்.

இது இவ்வாறிருக்க, தமிழ் சினிமாவில் விஷால் தனக்கென்றொரு இடத்தையும், ரசிகர் வட்டத்தையும் உருவாக்கிக் கொள்ளக் காரணமாக அமைந்தவர் யார் என்றால் இயக்குனர் லிங்குசாமி தான். அவர் இயக்கிய படம் தான் விஷாலின் இரண்டாவது படமான சண்டைக்கோழி. "சூப்பர்ஹிட் படமான சண்டைக்கோழி" தான் ரசிகர்களிடம் விஷால் என்ற நடிகனை ரசிகர்களிடம் கொண்டுசேர்த்தது என்று சொல்லலாம்.

விஷாலின் தந்தையின் தயாரிப்பில் உருவான இந்த "சண்டைக்கோழி" படப்பிடிப்பின்போது இயக்குனர் லிங்குசாமிக்கும் விஷாலுக்கும் இடையில் மனக்கசப்பு தோன்றியதாகவும், அதனால் பலவருடங்களாக பேசாமல் இருந்த இவர்கள் சிலகாலத்துக்கு முன்னர் நண்பர்கள் மீண்டும் ஆகியுள்ளார்களாம். நண்பர்களானதோடு நிறுத்தாமல் திரைப்படத்திலும் இணையவுள்ளார்களாம்.

"ஆம்பள" படத்தை முடித்ததும் வேந்தர்மூவீஸ் தயாரிக்க இயக்குனர் சுசீந்திரன் இயக்கும் மற்றொரு புதிய  படத்தில் நடிக்கவுள்ள விஷால், அதனைத் தொடர்ந்தே லிங்குசாமியின் படத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில் லிங்குசாமியும், நடிகர் கார்த்தியை வைத்து இயக்கவிருக்கும் "எண்ணி ஏழு நாட்கள்" படத்தை முடித்த பின்னரே விஷால் நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறாராம்.
 
 விஷாலும் லிங்குசாமியும்  மீண்டும் இணையவிருக்கும் இந்தப்படத்தின் கதை சண்டைக்கோழி இரண்டாம்பாகம் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அஞ்சான் இல்லையே... சண்டைக்கோழி இரண்டாம்பாகம் தானே என்ற ஆறுதலில் ரசிகர்கள்.                             

*கணேசமூர்த்தி ராகவன்.
449 Views
ஹீரோ ஆக வேண்டும் என்ற ஆசையில் சினிமாவிற்குள் வந்த பாரதிராஜாவுக்கு, இயக்குனராகும் வாய்ப்பு தான் கைகொடுத்தது. ஆனாலும் அதன் பின்னர் 1980ல் 'கல்லுக்குள் ஈரம்' திரைப்படத்தில் நாயகனாக நடித்தார். இப்படத்தின் பாடல்கள் சிறப்பாக அமைந்திருந்த போதிலும், படம் சுமாராகத்தான் ஓடியது. இப்படத்தின் பின் பாரதிராஜா ஹீரோவாக நடிக்கவில்லை.
தாவனிக் கனவுகள், ஆயுத எழுத்து, ரெட்டைச் சுழி, பாண்டிய நாடு, போன்ற படங்களில் சிறப்பான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.



34 வருடங்களுக்குப் பி;ன் இப்போது மீண்டும் தனது மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் 'ஓம்' என பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். தந்தை மகனின் பாசப் போராட்டத்தை கூறும் இந்த கதை பாரதிராஜாவிற்கு மிகவும் பொருந்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. முதன் முறையாக இப்படத்தில் பாரதிராஜாவுடன் இசையமைப்பாளர் யுவனும் இணைக்கிறார் என்பதும், கங்கை அமரன் பாடல்கள் எழுதுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் படப்பிடிப்புகள் இப்போது அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

தொகுப்பு

ர. பிரவீனா
494 Views
எகிறிக் குதித்த பந்து உதறித் தள்ளியது பில் ஹியுசின் கிரிக்கெட் எதிர்காலத்தை-மறைந்தும் மறையாமல் மக்கள் மனங்களில் ஹியுஸ்.

இன்றைய  நவம்பர் 27 ம் திகதி எல்லோரையும் உறைய வைத்த நாள்,உணர்வுகளை கொஞ்சம் கட்டிப்போட்ட நாள்,பிரார்த்தனைகளோடு கைகூப்பி கடவுளை பிரார்த்தித்த நாள்.கவலையோடு கவலையாய் கரைந்து போகிறது இன்றைய நவம்பர் 27.

கிரிக்கெட் உலகில் ஓர் கறைபடிந்த நாளாய் எல்லோரையும் கவலையில் ஆழ்த்தியிருக்கின்றது பில் ஹியுசின் இந்த திடீர் மரணம்.
கடந்த 25 ம் திகதி பிராந்திய அணிகளுக்கிடையிலான போட்டியின் போது தலையில் பந்து பலமாக தாக்கப்பட்ட நிலையில் ஊசலாடிய இவர்  உயிர் இன்று இவ்வுலகை விட்டு நிரந்தரமாகவே பிரிந்திருக்கிறது.

வாழ்ந்தது வெறும் 25 வயது வரைதான் என்பதில் எல்லோருக்கும் கவலை இருக்கலாம். இதைவிடவும் இன்னுமோர் கவலை இருக்கிறது எதிர்வரும் 3 தினங்களில் இந்த வீரனுக்கு பிறந்த நாள் வருகின்றது.
பிறந்த நாள் வரும் நேரம் இறந்த நாளை எண்ணி கண்ணீர் விட்டு அழவைத்து காலன் இவன் உயிரை பறித்தெடுத்திருக்கிறான்.

ஹியுஸ் அவுஸ்ரேலிய அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகளிலும்,25 ஒருநாள் போட்டிகளிலும் பங்கெடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2009-ல் இளம் கிரிக்கெட் வீரருக்கான பிராட்மன்  விருதைப் பெற்றார் பிலிப் ஹியூஸ். அப்போது அதிரடி ஆரம்ப வீரர் ஹெய்டன் ஓய்வை அறிவிக்க, அவரது இடத்தை நிரப்ப இந்த இளம் பிலிப் ஹியூஸ்  ஆஸ்திரேலிய அணிக்கு அழைக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூலை மாதம் தென்னாபிரிக்க A அணிக்கெதிரான போட்டியில் ஆட்டமிழக்காது 202* ஓட்டங்களை பெற்று ஒரு அவுஸ்ரேலியரின் முதல்தர /ஒருநாள் போட்டிகளில் பெற்ற அதிகூடிய தனிநபர் ஓட்ட எண்ணிக்கை என்ற சாதனையும் படைத்து தேர்வாளர்களை திரும்பி பார்க்க வைத்து பெரும் கனவுகளோடு பயணித்த ஒரு வீரனின் சாதனை பயணம் இப்போது வேதனையோடு முடிவுக்கு வந்திருக்கின்றது.

     

சொந்த மண்ணில் இடம்பெறவுள்ள உலக கிண்ணத்துக்கான  அவுஸ்ரேலிய அணியில் இடம் பெறவேண்டும் என்று ஆசை கொண்டிருப்பார்.இதைவிடவும் அவுஸ்ரேலிய டெஸ்ட் அணித்தலைவர் கிளார்க் உபாதை அடைந்துள்ள நிலையில் அவருக்கு பதிலாக இந்திய அணிக்கெதிராக இடம்பெறவுள்ள போட்டியில் அணியில் இடம்பிடிப்பதற்கான வாய்ப்பையும் பிரகாசப்படுத்தும் பல்நோக்கில் பந்துகளை நாற்திசையும் விரட்டி களமாடிய ஓர் இளம் வீரனை   காவுகொண்டிருக்கின்றது எகிறிக் குதித்த bouncer பந்தொன்று.

 கிரிக்கெட்டில் இதுமாதிரியான கறைபடிந்த நிகழ்வுகள் இதுவரை 5 இடம்பெற்றிருக்கின்றது.இந்திய வீரர் ராமன் லம்பா முதல் வீரரராக களத்தடுப்பில் ஈடுபட்டுகொண்டிருந்த வேளையில் பந்து பலமாக தாக்கி மரணமானார்.இறுதியாக பாகிஸ்தானின் 22 வயதான இளம் துடுப்பாட்ட வீரர் Zulfiqar Bhatti கடந்த டிசம்பரில் பந்து தாக்கி மரணமானமையும் குறிப்பிடத்தக்கது.

இப்படியான மரணங்கள் இதுவரை சம்பவித்தாலும் இந்த பில் ஹியுசின் மரணம் இப்போது எல்லோரையும் அதிகம் கதிகலங்கச் செய்திருக்கின்றது.

அதுவும் இந்த வீரனின் தாயார்,சகோதரி ஆகியோர் போட்டியை கண்டு கழித்துக் கொண்டிருந்த நிலையில் அவர்கள்  கண்முன்னே இந்த விபரீதம் நடந்தேறியிருக்கின்றது.

இந்த விபரீத விபத்துக்கு காரணமாக இருந்தது அவர் அணிந்திருந்த தலைக்கவசம் தான் காரணம் என்று கருதப்படுகின்றது.ஆனாலும் கூட அதனை மறுத்து அந்த தலைக்கவச நிறுவனம் கருத்து  வெளியிட்டுள்ளது.   

நவீனரக ஹெல்மெட்டை அணியாமல் பழைய மற்றும் மெல்லிய ஹெல்மட்டை ஹியூஸ் உபயோகித்ததாக பிரிட்டனை சேர்ந்த ஹெல்மட் தயாரிப்பு நிறுவனமான மசூரி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அதன் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், "ஹியூஸ் அணிந்திருந்த தலைக்கவசம் தொடர்பாக அவர் விளையாடிய போட்டியின் வீடியோ பதிவின் மூலம் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்.

                      

பந்து ஹெல்மட் கிரிலுக்குப் (தடுப்பு) பின்னால் மண்டை ஓட்டுப் பகுதிக்கு கொஞ்சம் கீழே தாக்கியிருக்கிறது.
பந்துக்கு ஏற்றவாறு ஒரு துடுப்பாட்ட வீரன் உடலை அசைத்து விளையாடும் போது  கழுத்து மற்றும் தலைக்கு இடையிலான பகுதியை தலைக்கவசத்தால் முழுவதுமாக பாதுகாக்க முடியாது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர் .


இதேவேளை பிலிப் ஹியூசிற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட  செண்ட் வின்செண்ட் மருத்துவமனை மருத்துவர் டோனி கிராப்ஸ் அவர்களின் கருத்துப்படி பவுன்சர் பந்தில் அடிபட்டு இத்தகைய தீவிர காயம் ஏற்படுவது அரிதிலும் அரிது என்று குறிப்பிடுகிறார்.

மூளைக்குச் செல்லும் மிக முக்கியமான ரத்த நாளங்களில் ஒன்று கடுமையாக அழுத்தப்பட்டு நசுங்கிப் போய் விட்டது. பந்து அந்த அளவுக்கு படு வேகமாக தாக்கியுள்ளது. இதுதான் அவரது மரணத்திற்கு முக்கியக் காரணம் என்கிறார்.

எங்களது மருத்துவமனயில் இதுபோல இதுவரை எந்த நோயாளியும் வந்ததில்லை. இது மிக மிக அரிதானது.
மொத்தமாகவே இதுவரை இது போன்ற நிலை 100 பேர்களுக்குத்தான் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பாக கிரிக்கெட் பந்தில் அடிபட்டு இப்படி நிகழ்வது ஒரேஒரு முறை ஏற்பட்டுள்ளது என்றும் மருத்துவர்கள் சொல்கின்றனர்.

எது எப்படியாயினும் பில் ஹியுசின் இந்த மரணம் இன்னும் பல நாட்களுக்கு பலரையும் இந்த எகிறிக் குதிக்கும் பந்துகளால் பயமுறுத்தலாம் என்பது திண்ணமே.

எங்கள் காலத்தில் நாங்கள் கிரிக்கெட் பார்த்து ரசித்த மேற்கிந்திய தீவுகளின் காட்னி  வால்ஷ்,அம்புரோஸ்,தென் ஆபிரிக்காவின் அலன் டொனல்ட் ,ஷோன் பொல்லாக் இலங்கையின் சமிந்த வாஸ் ,இந்தியாவின் ஸ்ரீநாத் பாகிஸ்தானின் வாசிம்,வக்கார்,அக்தார் அவுஸ்ரேலியாவின் மக்ராத்,ப்ரெட் லி ,பிளெமிங் ,கில்லெஸ்பி என்று ஏராளமான புயல் வேகப் பந்தாளர்களை பார்த்திருக்கிறோம்.

எதிரணி வீரன் ஒருவன் பந்துகளை பந்தாடி அடித்து நொறுக்கும் போது அவனை பதம் பார்க்க ஏன் ஒரு bouncer வீசக்கூடாது என்றும் அங்கலாய்த்திருக்கிறோம்.ஆனால் அப்போது எல்லாம் இப்படியான விபரீத மரணங்கள் நேர்ந்ததில்லை.

இப்படியான பந்துகளை இப்போதும் துல்லியமாய் வீசும் வேகப் புயல்களை சொல்லிப் புரிய வைக்க வேண்டிய தேவையில்லை எனலாம்.

இனி வரப்போகின்ற நாட்களில் பந்து வீச்சாளர்களின் ஒரேயொரு கூரிய  ஆயுதமாக பாவிக்கப்பட்ட இந்த மாதிரியான பந்துகளுக்கு தடை வரலாம் என்ற கதையும் அதிகம் உலாவுகின்றது.

ஆனது ஆகட்டும் போனது போகட்டும் என்று 25 வயதான பில் ஹியுசின் மரணம் எல்லோராலும் மறக்கப்படலாம் ,சிலவேளைகளில் இப்படியொரு சம்பவம் இன்னுமொரு தடவை நடந்தால் அப்போது எங்களுக்கு இந்த பில் ஹியுஸ் நினைவுக்கு வந்து போகலாம்.ஆனால் அணுவணுவாய் ஒவ்வொரு நாளும்,ஒவ்வொரு நொடியும் இவர் பிரிவால் இன்னுமொரு வீரன் அனுதினமும் மரணிக்கபோகின்றான்.

சர்வதேச அரங்கில் இன்னும் பிரகாசமாய் ஆடவேண்டும் என்ற ஆசையோடு காத்திருக்கும் இந்த வீரனின் எதிர்காலமும் கேள்விக் குறியாகிவிடக்கூடாது என்பதுதான் எல்லோர் விருப்பமும்.



அவன் பெயர் ஷோன் அப்புட்.
வயது 22.

பில் ஹியுசின் மரணத்துக்கு காரணமான அந்த கோர BOUNCER பந்தை வீசிய வீரர் இவர்தான்.  துடிப்பான இந்த வேகபந்து வீச்சாளன் முதுகில் ஏறி பந்து மூலமாய் வேகமெடுத்து பில் ஹியுசின் உயிரை காலன் காவிச்சென்றததற்கு நாங்கள் காலகாலமாய் அந்தப் பழியை இந்த பால்வடியும் பாலகனிடம் கட்டி இவன் எதிர்காலத்தையும் கேள்விக் குறியாக்கி விடக் கூடாது என்பதுவே எல்லோர் விருப்பமுமாகும்.

சர்வதேச வீரர்கள் பலரும் தங்கள் கண்ணீர்க் காணிக்கைகளை செலுத்தலாம், சமூக வலைத்தளங்களில் இன்னுமின்னும் இவருக்கு அஞ்சலிகள் அதிகரிக்கலாம்,ஏன் போட்டிகளும் தள்ளிப் போகலாம் எல்லாம் நடக்கலாம் ....

 இதுவும் கடந்து போகும் என்று நாளடைவில் நம் மத்தியில் பில் ஹியுசின் நினைவுகளும் மரித்துப் போகும்.

எட்டத்தே தள்ளி வைக்க நினைத்தாலும் எட்டுத் திக்குகள் சென்று வந்தாலும் எப்போதும் எங்கள் எல்லோரையும் விட பில் ஹியுஸ் நினைவுகள் நிழலாடுவது அவர் குடும்பத்தாருக்கு மட்டுமே என்றால் அது ஒன்றும் மிகையல்லவே.

கிரிக்கெட் ரசிகர்களாய் இவர் குடும்பதுக்காக பிரார்த்திப்பதை தவிர எங்களால் என்னதான் செய்துவிட முடியும் என்று சிந்திக்கின்ற போது வாய்மூடி மௌனியாகிறோம்.

ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டவர் யாரும் மாநிலம்  வந்தது இல்லைதானே ,இந்த மகோன்னத மாவீரனின் மறைவால் இந்த கிரிக்கெட் உலகம் இப்போது ஸ்தம்பித்துப் போயிருக்கிறது.

கரம் கூப்பி பிரார்த்திப்போம் களமாடிய மாவீரன் மறைவுக்கு.
ஆத்மா சாந்தியடையட்டும்.

*தில்லையம்பலம் தரணீதரன்











5.பந்து வீசிய 22 வயதான sean abbott மருத்துவ மனைக்கு சென்று பார்வையிட்டு மனமுடைந்து திரும்பும் போது.



6.கவலையில் அவுஸ்ரேலிய வீரர்கள்.












                                 


#twitter  தளத்தில்.   









    


  

 
1,236 Views
[1]      «      1766   |   1767   |   1768      »      [1792]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top