பெண்கள் தங்கள் அழகை மென்மேலும் மெருகேற்றிக்கொள்ள மருதாணி இட்டுக்கொண்ட காலம் மாறி தற்போது மெகந்தி இட்டுக்கொள்கின்றனர்.
இதை பல டிசைன்களில் கைகள் மற்றும் கால்களில் வரைந்து கொள்ளலாம். ஆனால் இது உடலுக்கு கேடு விளைவிப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஆனால் எந்த விதமான பக்க விளைவுகளும் அற்ற மருதாணி தரும் இயற்கை அழகுக்கு எப்போதும் தனியிடம் உண்டு. அதைப்பற்றி இன்றைய அழகுக்குறிப்பு பகுதியில் பார்ப்போம். மருதாணி இலைகளை பறித்து வீடே மணக்கும் அளவிற்கு அம்மியில் அரைத்து இரவு சாப்பிட்டு முடிந்தவுடன் கைகள் மற்றும் கால்களின் விரல்களிற்கு போட்டு அடுத்தநாள் காலையில் அழகு பார்த்த காலங்கள் உண்டு.
மருதாணியின் இலை, பூ, பட்டை என அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தவை. தலைவலி, கை கால் வலி, எரிச்சல் போன்ற பிரச்சினைகளுக்கு மருதாணி நல்ல தீர்வை தரும். சரும பிரச்சினைகள் உள்ளவர்களும் அதிகமாக பயன்படுத்தலாம்.
மருதாணி இலையை அரைத்து உள்ளங்கை, உள்ளங்காலில் தேய்க்கலாம். கண் எரிச்சல், கை கால் எரிச்சல் குணமடையும். அதேபோல நக புண், நகசுத்திக்கு மருதாணி இலைகளை அரைத்து அதன் மேல் கட்டினால் விரைவில் குணமடையும். மருதாணியை தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் வடிகட்ட வேண்டும். இதை இலை 'ஊறல் குடிநீர்' என்று கூறுவார்கள்.
இதனை காயம் பட்ட இடத்தில் விட்டு ஒத்தடம் கொடுத்தால் கிருமித்தொற்று ஏற்படாது. அதேபோல இந்நீரை பாலுடன் கலந்து குடித்து வந்தால் கை கால் வலி நீங்கும். மருதாணி விதையை தணலில் போட்டு உடலில் புகை படும்படி செய்தால் வெண்புள்ளிகள் மறையும்.
மருதாணி மிகவும் குளிர்ச்சியானது என்பதால் உடல் சூடடை தணிக்கிறது.
எனவே மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி மருதாணியின் மூலம் அழகையும் ஆரோக்கியத்தையும் பெறலாம்.