நடிகை நயன்தாரா சினிமா திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள திரையுலகிலும் பல வருடங்களாக நடித்துக் கொண்டிருக்கிறார். நடிகை நயன்தாரா தனித்தும், பிற கதாநாயகர்களுடன் இணைந்தும் நடித்துள்ள படங்கள் நல்ல வசூலை தந்துள்ளது.
ஓரிரு வருடங்களுக்கு முன்பு வரை அவரது சம்பளம் அதிகபட்சம் ரூ.3 கோடி என்று இருந்தது. பின்னர் அது ரூ.5 கோடியாக உயர்ந்தது.இந்த நிலையில், தற்போது தன்னுடைய சம்பளத்தை ரூ.10 கோடியாக உயர்த்திவிட்டதாக இணைய தளங்களில் தகவல் பரவி சக நடிகைகளை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்துக்குத்தான் அவர் ரூ.10 கோடி கேட்டதாக கூறப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துள்ளதோடு ஆர்ச்சரியத்தில் உள்ளனர். இந்த விடயத்தினை இதுவரை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. ஏற்கனவே, தனி ஒருவன் படத்தில் ஜெயம் ரவியும், நயன்தாராவும் ஜோடியாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.