அண்மையில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’.
மேலும் இந்தத் திரைப்படம் குறித்து பலரும் தங்களுடைய கருத்தினை தெரிவித்து வருகின்ற நிலையில் இந்தத் திரைப்படம் குறித்து பிரபல நடிகை சிம்ரன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள கருத்து மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
நடிகை சிம்ரன் இந்தத் திரைப்படம் பற்றி கூறுகையில்,விக்னேஷ் சிவன் மீண்டும் ஒரு வெற்றியைப் பெற்றுள்ளார். வழக்கத்துக்கு மாறான ஒரு கதையை சரியாக படமாக்க வேண்டும் என்றால் அது விக்னேஷ் சிவனால் மட்டுமே முடியும். ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படம் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.