எப்படி முயற்சி செய்தும் உங்களால் உடல் எடையை குறைக்க முடியவில்லை என்பவர்கள் பின்வரும் வழிமுறையினை பின்பற்றி இந்த ஜூஸை அருந்திப்பாருங்கள்.
ஒரு வாரத்தினுள் இந்த ஜூஸை காலையிலும் மாலையிலும் ஒவ்வொரு குவளை அருந்தி வர வேண்டும். கீழே சொல்லப்படும் எல்லா பொருட்களையும் சேர்த்து ஜூஸ் தயாரித்து கொள்ளுங்கள். உடல் எடையை குறைத்துக்கொள்ளலாம்.
சரி இதனை எவ்வாறு தயாரிப்பது என்பது பற்றி இப்போது பார்ப்போம். ஒரு கிரீன் டீ பாக்கெட்டை எடுத்துக்கொள்ளுங்கள். அதை இருநூறு மில்லிலிட்டர் சுடு தண்ணீரில் போட்டு நன்றாக ஊறவைத்து கொள்ள வேண்டும். டீ தூள் அந்த தண்ணீரில் நன்றாக ஊறி தண்ணீரும் நன்றாக ஆறிவிடும். இந்த கிரீன் வாட்டர் அப்படியே இருக்கட்டும்.
அடுத்த படியாக பின்வரும் எல்லா பொருட்களையும் ஒவ்வொன்றாக போட்டுக்கொள்ள வேண்டும். ஒரு ஆப்பிளை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி போட்டுக்கொள்ளுங்கள்.
இஞ்சி ஒரு துண்டு தோல் சீவியது. இரண்டு தேக்கரண்டி வினாகிரி , எலுமிச்சை சாறு மூன்று தேக்கரண்டி, ஆகியவற்றை எல்லாம் போட்டுவிட்டு இறுதியாக நாம் முதலில் தயார் செய்துவைத்த கிரீன் டீ தண்ணீர் இப்போது சூடு ஆறிய நிலையில் இருக்கும். கிரீன் பாக்கெட்டை வெளியே எடுத்த பின் தண்ணீரை மட்டும் மிக்ஸியில் ஊற்றி மிக்ஸியை ஒட விடுங்கள்.
விழுது போல எல்லா பொருட்களும் அரைபட்டு ஜூஸ் போல நமக்கு கிடைக்கும். அதனை வடிகட்ட கூடாது. அப்படியே ஒரு குவளையில் ஊற்றி குடித்து விட வேண்டும். காலையிலும் மாலையிலும் அருந்தி வர வேண்டும்.
இரவில் தூங்குமுன் அரைமணி நேரத்திற்கு முன்னும் காலையில் உணவு உண்ட பின் ஒரு மணி நேரத்தின் பின்னரும் இந்த ஜூஸ் அருந்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி உடல் எடையை குறைத்து சமநிலையை பேணலாம்.