நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’வெந்து தணிந்தது காடு’.இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் இப்பொழுது நடிகர் சிம்பு தன்னுடைய அடுத்த திரைப்படமான ’பத்து தல’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கன்னடத்தில் வெற்றி பெற்ற திரைப்படமான ‘முப்தி’ எனும் திரைப் படத்தின் தமிழ் ரீமேக் திரைப்படம் தான் "பத்து தல". இந்தத் திரைப்படத்தில் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கவுள்ளனர்.இந்த நிலையில் இந்தத் திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மே 27ம் திகதி ஆரம்பமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.