தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்துள்ள 45ஆவது திரைப்படமான 'கருப்பு' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யாவின் 46 ஆவது திரைப்படம் அடுத்தாண்டு வெளியாகவுள்ளது .
இதனை தொடர்ந்து ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யாவின் 47 ஆவது திரைப்படத்தில் அவர் காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இத் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இத் திரைப்படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் படமாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது