தமிழ் திரையுலகில் நடிகர்,இயக்குனர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் பாக்யராஜ். இவர் 21 வருடங்களுக்கு பின்னர் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘3.6.9’. இந்தத் திரைப்படத்தினை இயக்குனர் சிவ மாதவ் இயக்கியுள்ளார்.
இந்தத் திரைப்படம் உலக கின்னஸ் சாதனை படைக்கும் விதமாக, நேரடியாக 81 நிமிடங்களில் திரைப்படமாக்கப்பட்டுள்ளது. மேலும் 24 கேமராக்களில் ஒளிப்பதிவு, 450 தொழில் நுட்ப கலைஞர்கள், 75க்கும் மேற்பட்ட நடிகர்களின் நடிப்பு என இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இந்தத் திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.இதில் படக்குழுவினருடன் நடிகர் பாக்யராஜ் அவர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது அவர் பேசியதாவது, "21 வருடங்களுக்கு பிறகு என்று சொல்லி திரும்ப திரும்ப போட்டு என்னையே சங்கடப்படுத்தி விட்டார்கள். நான் அவ்வப்போது நடித்துகொண்டு தான் இருக்கிறேன் நான் எப்போதும் ஹீரோ தான். இங்கு இயக்குனர் என்னை படைத்த அப்பா அம்மாவுக்கு என ஆரம்பித்தது எனக்கு பிடித்திருந்தது.இப்படம் 81 நிமிடம் தான் எடுப்பார்கள் என்பதால் 3 நாள் Recursion செய்தாரகள். யாராவது சொதாப்பினால் என்ன செய்வது என்று பயமாக இருந்தது. ஆனால் இவர்கள் 1 மாதம் Recursion செய்து வந்திருந்தார்கள். மிக கச்சிதமாக திட்டமிட்டு எடுத்தார்கள். இந்தப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்" என கூறியுள்ளார்.