மேலும் அந்த பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் சமந்தா கூறியதாவது,
பல படங்களில் நடித்த பிறகு தற்போது நான் நிறைய நம்பிக்கையுடன் இருக்கிறேன்.செக்ஸி பாடலாகட்டும் அல்லது ஆக்ஷனாகட்டும்,நான் வித்தியாசமான கதாபாத்திரங்களை நம்பிக்கையுடன் ஏற்கிறேன்.
இந்த தைரியமும்,நம்பிக்கையும் எனக்கு முன்பு இல்லை என்றார்.
அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் வந்த ஊ சொல்றியா மாமா பாடலுக்கு குத்தாட்டம் போட்டார் சமந்தா.அந்த பாடல் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானது.
தான் முதல்முறையாக குத்தாட்டம் போட்டது இந்த அளவுக்கு வெற்றி பெற்றதை பார்த்து சமந்தா மகிழ்ச்சி அடைந்தார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி,நயன்தாராவுடன் சேர்ந்து சமந்தா நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் படம் ஏப்ரல் 28ம் திகதி ரிலீஸானது.படத்தை பார்த்த அனைவரும் சமந்தாவின் நடிப்பை பாராட்டினார்கள்.
சமந்தாவின் கதாபாத்திரமான கதீஜா,நயன்தாராவின் கதாபாத்திரத்தை ஓவர்டேக் செய்துவிட்டது என விமர்சனம் எழுந்தது.