தமிழ் சினிமாவில் தனக்கெனத் தனி இடம் பிடித்து, ரசிகர்களைத் தன் வசப்படுத்தி, அவர்களால் செல்லமாக 'தல' என அழைக்கப்படும் அஜித்திற்கு கடந்த இரு தினங்களுக்கு முன்னர், இனம்தெரியாத நபர் ஒருவரால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது,
இதனையடுத்து ஒன்றரை மணித்தியாலத்திற்கு மேல் பொலிசார் சோதனை செய்து பார்த்து வெடிகுண்டு இல்லை என்பதை உறுதிசெய்திருந்தனர். இது தொடர்பில் மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மிரட்டல் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய கோரி, மதுரையிலுள்ள 'தல' யின் ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டியிருந்தனர். ' வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கோழைகளை கைது செய்....' என்று ஆரம்பிக்கும் இந்த சுவரொட்டிகள் அந்த பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதே மாதிரி ஒரு வெடிகுண்டு விஷயம் தான் 'பாட்ஷா' திரைப்படத்தின் வெற்றி விழாவின் பின்னர் ரஜினியை அரசாங்கத்தோடு மோத வைத்து, அரசியல் சாயத்தை ரஜினி மேல் பூச ஆரம்பித்தது.
இப்போது அமைதியாக இருக்கும் அஜித்...
ஏதோ பார்த்து நடந்துகொள்ளட்டும்.