இருபாலாருக்குமாக 4 வயது பிரிவுகளில் நடைபெறவுள்ள மெய்வல்லுநர் போட்டிகளில் நாடு முழுவதிலும் இருந்து 3000ற்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள் போட்டியிடவுள்ளனர்.
வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்திலிருந்தும் பெருமளவிலான வீர, வீராங்கனைகள் இப் போட்டிகளில் பங்குபற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 16 வயதுக்குட்பட்ட, 18 வயதுக்குட்பட்ட, 20 வயதுக்குட்பட்ட, 23 வயதுக்குட்பட்ட நான்கு வயது பிரிவுகளில் மொத்தம் 124 இறுதிப் போட்டிகள் 4 தினங்களில் நடைபெறவுள்ளன.
கொரோனா தொற்றுநோய் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டிகள் நடத்தப்படவில்லை. இதன் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக போட்டிகளில் பங்குபற்ற முடியாமல் போன 20 வயதுக்குட்பட்டவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் இந்த வருடம் 23 வயதுக்குட்ட வர்களுக்கு போட்டிகள் நடத்தப்படுவதாக இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தின் உதவித் தலைவர் ஜீ.எல்.எஸ். பெரேரா தெரிவித்தார்.